பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

வேண்டும் விடுதலை

இவையன்றிப் பொழுதுபோக்குகள் என்னும் தன்மையில் கீழ்மையும் கயமையும் முதலாளியக் கோட்பாடுகளும் ஒன்றிணைந்து பூத வடிவாக மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளன.

இவ்வனைத்துச் சீரழிவுகளையும் கொடுமைகளையும் கண்டு கண்டு எண்ணி எண்ணிப் புழுங்கிய இளமை மனங்கள் - இளைஞர்கள், தங்களால் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகி, இவ்வழிம்புகளுக்கெல்லாம் ஆக்கமாகவும் உரமாகவும் இருக்கின்ற முதலாளியப் பார்ப்பனிய நடுவண் அரசுடன் முரண்பட்டு எழுச்சி கொண்டு, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே வெகுண்டு எழுந்து அரசுடன் போராடத் தொடங்கி விட்டனர். தங்கள் கைகளில் கிடைத்த போர்க் கருவிகளை அரசின் அலுவலகங்களின் மேலும், ஆட்சியாளர்களின் மேலும், அவர்கள் பரம்பரையினர் மேலும் வீசத் தொடங்கித் தங்கள் வெறுப்புகளைக் காட்ட முற்பட்டுவிட்டனர். இவர்களை அமைதிப்படுத்தவோ அடக்கவோ வேண்டுமானால், அரசுச் சார்பில் நடைபெறும் அத்தனை இழுக்கல்களையும் சறுக்கல்களையும் சரிப்படுத்த அரசுத்தலைமை முன்வரவேண்டும். எரிவதைத் தடுத்தால் கொதிப்பு அடங்கிவிடுகிறது. அதைச் செய்ய முன்வராமல், இவ்விளைஞர்களை அரசு 'நக்சலைட்டி'னர் என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய வுணர்வுக்கும், பகைவர்கள் என்றும், பிரிவினைக்காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டிக் கொள்ளை முதலாளிகளை ஏவிவிட்டுப் பொதுமக்களுக்கு உண்மைகள் புலப்படாதவாறு மலையளவு விளம்பரங்களைச் செய்யச் சொல்லி மாநாடுகளை நடத்தத் தொடங்கிவிட்டனர்

உண்மையில், இந்தியத் தேசியம் என்பது இந்துமத ஆளுமை, பார்ப்பனியத் தலைமை, முதலாளிய வல்லாண்மை என்னும் பொருளுடையதே! இவற்றுக்கு மாறாக யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், செயலைச் செய்தாலும் அவர்கள் மக்கள் பகைவர்கள், தேசியப் பகை ஆற்றல்கள், பிரிவினைக்காரர்கள் என்று கூறுவது நடைமுறை ஆகிவிட்டது.

இந்த அழிம்புகளை யெல்லாம் ஒழிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்து எழுச்சி கொண்டு எதிர்த்தால்தான் இந்தத் தில்லி வல்லாண்மையை வீழ்த்த முடியும்.

இந்திராக் கட்சி பெரும் பெரும் பணமுதலைகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடுத்துவரும் தமிழ்நாட்டுத் தேர்தலில்