பக்கம்:வேமனர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேறு

48. பரவும் மூன்று தெய்வங்கள்
பாரில் தோன்றச் செய்தவர்யார்?
திரமில் லாதார் இவர்தம்மைத்
தினமும் பணிவார்; இவர்மூடர்.

வேறு

49. சமயங்கள் பலப்பலவாம்; கொள்கைகளும் பலவாம்;
தனித்தாயின் இவைபொய்யே: பேருண்மை ஒன்றே!
சமயத்தின் ஆசாரம் விடுத்தந்த பிரமம்
தானுக முயல்வதுவே மேலான நெறியாம்.

50. சிறந்ததுகொல் லாமையெனப் பகர்ந்திடுமந் தணர்கள்
தீமகத்தில் பலியிட்டுத் தாமுகந்துண் கின்றார்:
இறந்தபினர் விலங்குகளைக் கரந்துணுஞ்சண் டாளர்
இவர்களினும் மிகப்பெரிய குலமுடையார் அன்றோ?

வேறு

51. வேறு நட்டதோர் கல்லைச் சிவனெனப் பேசி
நாடொறும் சிறப்புகள் புரிவார்
நட்டகல் லகத்திற் சிவனிலே, நம்முள்
நாயக னுளனறிந் திடுமின்.

வேறு

52. வேறு வளமான நின்பார்வை ஒன்றாக இருந்தால்
மங்கையுடன் வாழ்பவர்போல் நின்னறிவு பொலியும்;
அளவற்ற பெருஞ்செல்வப் பிரபுவெனச் சால
அகத்தினிலும் புறத்தினிலும் தனிச்சோதி மிளிரும்.

வேறு

53. தொலைவினில் உள்ளதத் தெய்வமென் றோதிடில்
தூரத்து மேவுவான்;அருகிலுள் ளானெனில்
மலேவெலொம் ஒட்டியில் வுடலினக் கோவிலாய்
மகிழ்வுடன் எண்ணியிங் குவகையோ டொன்றுவான்;
தலைமைசால் அன்னவன் ஊர்தியில் வாழ்வினைச்
சஞ்சலம் இல்லாமல் அன்பிற் பிணித்திடில்
உலகினில் அப்பொருளைச் சோதிபோல் அழிவிலா(து)
ஊழிகள் தேயினும் மாருது வாழுவார்.

54. செம்பொன்னும் வெண்பொன்னும் குன்முக இருப்பச்
சிவபிரான் வீடுதொறும் பிச்சையெடுத்தனனே;
அம்புவியிற் செல்வங்கள் சாலவிருந் தாலும்
அடுத்தவர்தம் பொருளினிலே விருப்பமுள தையா.

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/101&oldid=1256134" இலிருந்து மீள்விக்கப்பட்டது