இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55.இவ்வுலகம் மாயையென வேதாந்தி பகர்வான்;
இதுதெய்வத் தன்மையுடைத் திதுமாயை அல்ல;
இவ்வுலகம் மாயையெனிற் பொய்யாத தெய்வ
இருப்பெங்கண் உளததனைத் தெரிந்திடுதல் வேண்டும்.
56. இவ்வாழ்வின் இன்பங்கள் விட்டுவிட் டால்லாபம்
எஞ்சுமெனப் பகர்பவர்கள் நம்பிக்கை பொய்யே!
இவ்வாழ்வில் மறுவுலகம் மெல்லமெல்ல ஒளியை
இன்பமுடன் வீசுவதை நண்புடன்கண் டிலிரோ?
95