பக்கம்:வேலின் வெற்றி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வேலின் வெற்றி, அது கேட்ட மகிழ்வுற்ற ஈசன், அழகிய குமாரனை எடுத்து அனைத்து, உச்சி ம்ோந்து, "பிரமனும் அறியாத 'ஓம்' என்னும் சொல்லின் பொருள் உனக்குத் தெரியுமோ? தெரிந்தால் அதன்ை இப்போதே சொல்" என்று வினவினார். - "முற்றறிவுடைய முதல்வா! உலகமெல்லாம் ஈன்ற உமாதேவியார்க்கு மற்றையோர் அறியாதவாறு நீர் சொல்லி யருளிய மூலப் பொருளை எல்லோரும் கேட்க இங்குக் கூறலாமோ?" என்ற குமாரவேள் சொல்லிய பொழுது, ஈசனார் மனம் குளிர்ந்தார். மீண்டும் மைந்தனை நோக்கி, "எமக்கு மட்டும் அப் பொருளை மறைவாகக் கூறுவாயோ?” என்று தம் திருச்செவியைச் சாய்த்தார், ஈசன், அப்போது முருகன் பிரணவம் என்னும் ஓங்காரத்தின் உட்பொருளை எடுத்துரைத்தார். அவ் வுரை கேட்டு, ஞான நாயகன்ாகிய ஈசன் அகமகிழ்வடைந்தார்; மைந்தனுக்கு நல்லருள் புரிந்தார். அங்கேயே தலைமையோடு இருக்கும் வண்ணம் திருவருள் செய்து முன்போலவே இடப வாகனத்தில் ஏறிச் சென்று எம்பெருமான் கயிலாய மலையை அடைந்தார். இவ்வாறு சில நாள் இருந்த குமரவேள், திருவருட் இந்திரன் செயலால், கயிலாய மலையில் வீற்றிருந்தருளும் ( அம்மையப்பருடைய திருவடிகளை வணங்கத் திருவுளம் கொண்டார். அங்ங்னமே சென்று, அவரைத் தொழுது, கயிலாயத்தில் கந்தவேள் தங்கியிருக்கையில், இந்திரன், தன் நெடிய மனக்கவலையைப் பிரமதேவனிடமும் திருமாலிடமும் முறையிட்டு அவரை முன்னிட்டுக் கயில்ாய மலையை வந்தடைந்தான். "அன்பினால் உலகம் காக்கும். அம்மையோடு அமர்ந்து அருளும் ஆண்டவனே! அளவற்ற காலமாக அருந்திறல் வாய்ந்த சூரன் முதலிய அசுரர்களால் வன்மையற்று வருந்தினோம்; ஒடுங்கினோம். என் மைந்தனாகிய சயந்தனும், எண்ணிறந்த வானவரும், எல்லையற்ற அழகுடைய அரம்புையரும், கொடுந்தொழில் புரியும் அரக்கர்கோன் ஆளும் நகரத்தில் சிறையிருக்கிறார்கள். எம்பெருமானே! முன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/44&oldid=919843" இலிருந்து மீள்விக்கப்பட்டது