பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 வேலை நிறுத்தம் ஏன்? "அவர் இங்கே வருவானேன்?" "எல்லாம் காரியமாகத்தான் வந்திருக்கிறார்!- ஒரு காரா, இரண்டு காரா? ஒராயிரம் கார் வந்து வாசலில் நிற்கிறது - போக்கு வரத்துக்கு இடைஞ்சலில்லாமல் அவர் பார்த்துக் கொள்ள வேண்டாமா?" "அட பாவமே, நேற்று நான் ஒரு ஸ்பான்ஜ்' வாங்க வேண்டுமென்று சொன்னேன்; ஒருவேளை." "சரிதான், அதைத்தான் அத்தனை பேரும் வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறார்கள் போலிருக்கிறது!" என்று சிரித்தாள் குஞ்சம்மாள் லீலா கால்களை மாறி மாறி உதறிக் கொண்டு, "ஐயோ, இப்பொழுது நான் என்ன செய்வேன்? எப்படி எனக்காக அவர்கள் போடும் போட்டியைத் தீர்த்து வைப்பேன்?" என்று கலங்கினாள். "அடி அசடே, அதைப்பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்? - வருவதை வாங்கிப் போட்டு வைத்தால் போச்சு!" "என்னமோ போம்மா, எனக்கு ஒன்றுமே பிடிக்க வில்லை!"