பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 வேலை நிறுத்தம் ஏன்? தலையிலிருந்த பூக்களில் ஒன்றை எடுத்தான்; தடுக்கவில்லை. பின்னலைத் தொட்டான் பிடுங்கிக் கொள்ள வில்லை. கதவைத் தாளிட்டான்; திறக்க வில்லை. விளக்கை அணைத்தான் ஏற்ற வில்லை ." "அட பாவி, அப்புறம்?" "தேவலையே, மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன்' என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்." "ம். அப்புறம் என்ன நடந்தது, லீலா?. சீக்கிரம் சொல்லு!" 'அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டுமாம்?" "சொல்லு, லீலான்னா..!" "போங்க ளலார்ன்னா..!" "சொல்லப் போகிறாயா, இல்லையா?" "சொல்லாவிட்டால்..?" "என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிடும்!"