பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 வேலை நிறுத்தம் ஏன்? நீங்கள் சொன்ன மாதிரியே பஞ்சகச்சத்தை இறுக்கி இறுக்கிக் கட்டிக் கொண்டு பிடித்தான் ஒட்டம்!" என்றாள். "பலே, அப்படிச் சொல்லு! - இந்தா, இதை நீ இப்போதே வைத்துக்கொள்!" என்று ரூபாய் ஐயாயிரத்துக்கு உடனே ஒரு செக் எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு, 'நான் வரட்டுமா?' என்றார் படாதிபதி. "ஐயோ, உங்களைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்?" என்று திடீரென்று உருகினாள் நட்சத்திரம் படாதிபதி திடுக்கிட்டு, "என்ன லீலா, என்ன உடம்புக்கு?" என்று கவலையுடன் விசாரித்தார். 'ஒன்றுமில்லை; நாளை ஷ9ட்டிங்'குக்கு டைலாக் வரப்படுத்திக் கொண்டிருக்கிறேன் - போய் வாருங்கள்!" என்று அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைத்ததோடு, சஞ்சலத்தையும் போக்கி வைத்தாள் நட்சத்திரம்!