பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே! என்று பதிலுக்குக் குத்தலாகக் சொல்லிக் கொண்டே, ஒரு ஸிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் சோமு. பீதாம்பரம் திடுக்கிட்டு, "மாலா என் மனைவி என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டான். "அதிருக்கட்டும், பாலா என் தங்கை என்று உமக்கு எப்படித் தெரிந்தது?" என்று திரும்பிக் கேட்டார் சோமு. "நீங்களாவது சேர்ந்து வாழ்கிறீர்கள், நாங்கள் இருவரும் சேர்ந்துகூட வாழ்வதில்லையே? அதனால் தான் எப்படித் தெரிந்தது என்று கேட்கிறேன்!" "என்ன ஐயா, இப்படிக் கேட்கிறீரே! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா? எல்லாவற்றையும் 'அட்ஜஸ்ட்' பண்ணிக் கொள்ளக்கூடிய ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது; உங்களுக்கு இல்லை. அவ்வளவு தான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்!” "என்ன இருந்தாலும் இரவில் சில சமயம் இங்கே வந்து என் மனைவி எனக்கு முன்னால் பல பெரிய மனிதர்களுடன் பழகும்போது."