பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 743 'அதற்காகச் சில பைத்தியக்காரர்களைப் போல வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வேண்டுமென்று நீங்களும் கூச்சல் போட ஆரம்பித்து விடாதீர்கள் அது ஒழிந்தால் பணக்காரர்கள் ஒழிந்து விடுவார்கள். அப்புறம் நீங்களும் நானும் பெண்ணைப் பொது வுடமை யாக்க முடியாது; அப்படி ஆக்கினாலும் அவளைச் சுவைத்துத் துப்பப் பெரிய மனிதர்களும் இருக்க மாட்டார்கள்!" "ஆமாம் ஆமாம், திடீரென்று மூளைக்கோ உடலுக்கோ வேலை கொடுக்க நம்மால் முடியுமா? அப்படியே கொடுத்தாலும் பாண்டியாக் சவாரியும் பங்களா வாசமுந்தான் கிடைக்குமா?" "அப்படிச் சொல்லுங்கள்; வாழ்க்கை வாழ் வதற்கே!" என்று அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கியபடிக் கத்தினான் பீதாம்பரம் "ஒரு சிறு திருத்தம்; வாழ்க்கை எது வேண்டு மானாலும் செய்து வாழ்வதற்கே!" என்று மாற்றிச் சொல்லுங்கள்!' என்று "பிரியாணி நிறைந்த தம் தொந்தியை ஆறுதலுடன் தடவி விட்டுக் கொண்டே எழுந்தார் டைரக்டர் சோமு. 'இன்றிரவு 'கால்-வீட் போட்டிருக்கே! ஷ9ட்டிங்குக்காக ரிஹர்ஸல் எதுவும்."