பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 வேலை நிறுத்தம் ஏன்? கண்ணிழந்த முத்தாயி அவனைக் கவனிக்க வில்லை; கண்ணிருந்த அவனும் அவளைக் கவனிக்க வில்லை - இருவரும் மோதிக் கொள்கின்றனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ரத்தினம் ஒ கே யை அறைகிறான். அதைப் பொருட்படுத்தாமல் ஓ.கே. அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, 'இதோ பார், பிரேமலிலா பிக்சர்லாருக்கு டிரைவர் தேவையாம் - இன்றே நான் அவர்களுடைய டிரைவராவேன்; அப்புறம் நடிகனாவேன்; அதற்குப் பின்படாதிபதியாவேன்," என்று உற்சாகத்துடன் கத்திக் கொண்டே ஓடுகிறான் - ரத்தினத்துக்கு அவன் குணாதிசயம் விளங்காத புதிராயிருக்கிறது. பிரேம வீலா பிக்சர்ஸ்ாரின் ப்ரொடக்ஷன் மானேஜரான பீதாம்பரத்தைச் சந்திக்கிறான் ஓ.கே. படாதிபதி பத்மனாபன் படுக்கையறையை விட்டு இன்னும் வெளியே வரவில்லை யென்றும், அவர் வரும்வரை விளலிட்டர் ஹாலில் போடப்பட்டிருக்கும் 'பெஞ்ச்சின் மேல் மற்றவர்களுடன் சேர்ந்து உட்காரும் படியும் ஓ.கே. யிடம் சொல்கிறான் பீதாம்பரம். அதனாலென்ன, நான் வேண்டுமானால் பூபாளம் பாடி அவரை எழுப்புகிறேன்!" என்று ஓ.கே. அவனைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டுப் படாதிபதியின் அறைக்குள் நுழைய முயல்கிறான்