பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 59 இத்தனைக்கும் மந்திரிப் பதவிகள் அவர்களுக்குச் சாசுவதமானவை யல்ல. இதை நாம் சொல்லவில்லை; அவர்களே சொல்கிறார்கள். யார் சொன்னாலும் இது உண்மைதான். நாளைக்கே அரசியல் உலகத்தில் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அவர்கள் வெளியே வந்துவிட வேண்டியவர்கள் மீண்டும் பொதுஜன ஆதரவைத் தேடக் கூடியவர்கள். இந்த நிலையில், பொதுஜனங்களை அவர்கள் அலட்சியம் செய்வது ஆபத்தானது; காங்கிரஸின் செல்வாக்கையே பாதிக்கக் கூடியது. இந்த விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் பயங்கரமான அடக்குமுறைகளைக் கையாளும் போதெல்லாம் பழியைப் பொதுஜனங்கள் மீது போடுகிறார்கள் பொதுஜனங்கள் வேறு, தொழிலாளிகள் வேறு என்று விஷயம் தெரியாமல் பிரித்துப் பேசுகிறார்கள் இதைப் போன்ற அபத்தம் வேறு இருக்க முடியாது. ஏனெனில், ஒருபோதும் தொழிலாளிகளும்