பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சியிடம், அந்தத் தலைவர்களிடம் என்றுமே எனக்கு அனுதாபம் உண்டு. சமீபகாலத்தில், தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின்போது என் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய எண்ணங்கள், அபிப்பிராயங்கள்தான் சரியானவை என்று நான் சாதிக்கவில்லை. அபிப்பிராய பேதங்களுக்குச் செவி சாய்க்காத யார்தான் உண்மையான ஜனநாயக வாதியாக வாழ முடியும்? ஆகவே, இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நேயர்கள் என்னுடைய அபிப்பிராயங்களை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. ஆனால் படிக்கும் நேயர்களின் சிந்தனையை இந்தப் புத்தகம் சிறிதளவாவது தூண்டிவிட வேண்டுமென்றுதான் விரும்புகிறேன். என்னுடைய விருப்பத்தை இந்தப் புத்தகம் எவ்வளவு தூரம் நிறைவேற்றி வைக்குமோ நான் அறியேன். மதறாஸ் விந்தன் 14-7-7947