பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வேலை நிறுத்தம் ஏன்? "பேசாமல் இருடா, முட்டாள்!" என்று அவனை அடக்கிவிட்டு, 'யாரப்பா. நீ?" என்று ஒ. கே.யை விசாரித்தார் படாதிபதி பத்மனாபன். 'மன்னிக்க வேண்டும்; நான் டிரைவர். பத்திரிகையில் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன்." என்று முதலாளியிடம் எப்படிப் பேச வேண்டுமோ, அப்படிப் பேசினான் ஓ.கே. “எதற்கு மன்னிப்பது? - உன்னைப் போன்ற ஆட்கள் தாம்ப்பா எனக்கு வேணும். ஏய் பீதாம்பரம், இன்னிக்கு வந்த பாண்டியாக்கை இவனுக்குக் காட்டு. போப்பா, போய் அதை ஒட்டிக்கொண்டு வந்து வெளியே நிறுத்து!" என்று உடனே அவனுக்கு வேலை கொடுத்து விட்டார் பத்மநாபன். பீதாம்பரம் வேறு வழியின்றி ஓ.கே.யை அழைத்துக் கொண்டு ஷெட்டுக்குச் சென்றான். அவன் தலை மறைந்ததும், இந்தப் பீதாம்பரத்துக்குப் பதிலா நல்ல ராஜபாளையம் நாயா ஒண்ணு வாங்கி வளர்த்தாலும் நாயா உபயோகமாயிருக்கும்!” என்று படாதிபதி தலையில் அடித்துக்கொண்டார்.