பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 89 காரைக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திவிட்டுப் படாதிபதி பத்மநாபனை எதிர்பார்த்தபடி நின்றான் ஓ.கே. அப்போது பத்துப் பதினைந்து ஜதை பர்மா பாதரட்சைகளைத் துாக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அவனுக்க எதிரே வந்தான் ப்ரொடக்ஷன் மானேஜர் பீதாம்பரம். 'இவ்வளவு சிரமம் உங்களுக்கு ஏன் ஐயா, யாராவது ஒரு பையனிடம் கொடுத்தனுப்பி இருக்கலாமே?" என்றான் ஓ.கே. "அது எனக்குத் தெரியும்; நீ போ அப்படி!" என்று அவனை அதட்டிக்கொண்டே பீதாம்பரம் காரின் கதவை நெருங்கினான். ஓ.கே. இருந்த இடத்தை விட்டு அசையாமல், "தெரிந்தால் சரி!" என்று சொல்லிவிட்டு அவனை ஒரு தினுசாகப் பார்த்தான். "போகிறாயா, இல்லையா?" "எங்கே போக வேண்டும் என்று சொன்னால் தானே போவதற்கு?"