பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பரவாயில்லை. சொல்லு? படத்துக்கு உபயோகம் ஆகுமா என்று பார்க்கிறேன்" "சலவையாளர் ஒருவர் வீட்டில் நாய் ஒன்று இருந்தது." "கழுதைதானே இருக்கும்?" "அதுவும் இருந்தது; ஆனால் அது நம் பீதாம்பரத்தைப்போல அசட்டுக் கழுதையாயிருந்தது! ஒரு நாள் சலவையாளர் மேல் நாய்க்கு ஏதோ கோபம் திருடன் வீட்டருகே வந்த பிறகுங்கூட அது குரைக்காமல் இருந்தது. கழுதையால் சும்மா இருக்க முடியவில்லை; நாய்க்குப் பதிலாகத் தானே கத்தி எஜமானை எழுப்ப முயன்றது. அதன் பலன் என்ன வென்கிறீர்கள்! தூக்கங்கெட்ட கோபத்தில் சலவையாளர் எழுந்து வந்து, கழுதையை வெளுவெளு' என்று வெளுத்துவிட்டார்" "சரிதான், நீயும் அவனும் வேண்டுமானால் கழுதையும் நாயுமாக இருங்கள் என்னைச் சலவை யாளராக்க வேண்டாம்!” என்றார் பத்மனாபன் 'இதற்குத்தான் அப்பொழுதே நான் யோசித்தேன்!" என்றான் ஓ.கே. அதற்குள் கார் ஸ்பென்ஸரை அடைந்தது 'உனக்கு ஸ்பான்ஜ்' என்றால் என்னவென்று தெரியுமோ?" என்று கேட்டார் படாதிபதி.