பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 97 செய்யும்; போதும்!" என்றவர், "ஆக்ஸிடெண்ட், ஆக்ஸிடெண்ட்!" என்ற அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார் லீலாவின் விரலிலிருந்து கீழே விழுந்த ஒரு சொட்டு ரத்தத்தை விழி பிதுங்கப் பார்த்தவண்ணம், 'அம்மா கையிலேயிருந்து ரத்தமாக் கொட்டுதுங்க!” என்றான் சந்தர்ப்பத்தை எந்தப் பாடுபட்டாவது உபயோகித்துக் கொள்ளப் பார்த்த பீதாம்பரம். "பார்த்து இவ்வளவு நேரம் ஆகியும் பேசாமல் நிற்கிறாயேடா, மக்கு! - ஓடு ஒடு, உடனே நம்ம டாக்டருக்குப் போன் பண்ணி இம்மீடியட்டா இங்கே வரச் சொல்லு!" என்று கூறிவிட்டு, ஜாக்கெட்டைத் தானே பக்குவமாகக் கழற்றிச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு லீலாவின் கடைக்கண் வீச்சை எதிர்நோக்கி ஏங்கி நின்றார். அதற்குள் டாக்டர் விழுந்தடித்துக் கொண்டு ஒடி வந்து லெப்டிக் ஆகாமலிருப்பதற்காக ஒரு இஞ்ஜக்ஷன் கொடுத்தார். பிறகு, கீறல் விழுந்த இடத்தைத் துடைப்பதற்காக லீலாவின் கட்டை விரலைப் பிடிக்கப் போனார். அதற்குள் படாதிபதி முந்திக்கொண்டு, "நோ நோ! அந்த வேலையெல்லாம் உங்களுக்கு ஏன் ஸார்? நான்