பக்கம்:வேளிர் வரலாறு.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருது வேளிர் வரலாறு. உணரப்படும். பாரிமகளிர் இருவர் என்பது மேலே புலப்படுதலின், ஈண்டும் 'பாரிமகளிர் பாடியது' எனப் பொதுப்படக் கூறப்பட்டமை பற்றி, அவ்விருவருமே செந்தமிழ்ப்புலமையாற் சிறந்தவரென்பது தெளிவாகும். புலவரிருவர் சேர்ந்து ஒரு பாடல் பாடுவது முன்னை வழக்கே. இம்மகளிரது செந்தமிழ்ப்புலமை, தம்மரும்பெறற் றந்தை யாகிய வள்ளற்பாரிக்கு ஆருயிர்த்தோழரான கபிலர் என்னும் புல வர் தலைவர்பாற் பெற்றதாம். இதன்மேற் கபிலர் அவ்வூரை விடு த்து இளவிச்சிக்கோ என்பவனிடஞ்சென்று, இம்மகளிரது உயர் குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து இவர்களை மணஞ் செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட அவனுடம்படாமை யால், இருங்கோவேள் என்பானிடஞ் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்து பாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்து கொள்ள இயையாமையால் மனநொந்து, கபிலர், அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர் பாற்படுத்து, பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாரா யினர். இதற்கிடையில், கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சோமான்பாற் சென்று, அவனைப் பத்துப்பாடல்களாற் புகழ்ந்து பாடி நூறாயிரங்காணமும் அவன் மலைமேலேறிக் கண்டு கொடுத்த நாடும் அவன்பாற் பெற்றனர் எனத் தெரிகின்றது. இதுவே பதிற்றுப்பத் தினுள் ஏழாம் பத்தாவது. இவர், பாரி இறந்தபின்னே தான், அவ னது நற்குண நற்செயல்கள் செல்வக்கடுங்கோ வாழியாதனிடமும் இருப்பனவாகக் கேட்டு அவனைக் காணச் சென்றனராவர். இதனை- பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை தூக்கும் நாடுகெழு பெருவிறல் ஒவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் பொன்னி னன்ன பூவிற் பசியிலைப் புன்கா லுன்னத்துத் தலைவ னெங்கோப் புலர்ந்த சாந்திற் புலரா வீகை மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/68&oldid=990624" இலிருந்து மீள்விக்கப்பட்டது