பக்கம்:வைணமும் தமிழும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வைணவமும் தமிழும்



பெரியவாச்சான் பிள்ளை போன்ற வியாக்கியாதாக்கள் முதலானவர்களும் திருப்பல்லாண்டுடன் சேர்ந்து பெரியாழ்வார் திருமொழி ஒரே பிரபந்தம் என்ற திருவுள்ளம் கொண்ட்வர்கள். பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுரமான 'வேயர் தங்கள் குலத்து (5,41)' என்றதில் கோயில் கொண்ட கோவலன் என்ற சொற்றொடருக்கு வியாக்கியானம் செய்யுமிடத்தில், 'திருப்பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் இவர் மனத்திலிருக்கின்ற கிருஷ்ணன் தான் பிறந்தபடியையும் வளர்ந்தபடியையும் இவனைக் கொண்டு கேட்டான்' என்று பெரியவாச்சான் பிள்ளை கூறியிருப்பதனாலும் இதற்கு முன்னர் “திருப்பல்லாண்டின் அர்த்தத்தை நிகமிக்கிறார்” என்று பன்முறை கூறியிருப்பதனாலும் ஒரு பிரபந்தமானால் தான் “தொடக்கம்” என்பதும், “நிகமனம்” என்பதும் சேருமாதலாலும் இவர்கருத்து திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று என்பது உறுதிப்படுகின்றது.

மேலும் மணவாள மாமுனிகளின் “உபதேசரத்தின மாலையில்" 'பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்' (16) 'ஆதி திருப்பல்லாண்டானதுவும்' 19, 'உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை' (20) என்ற சொற்றொடர்களில் வரும் ‘திருப்பல்லாண்டு’ என்பது அது தனிப் பிரபந்தம் என்பதை உறுதிப்படுத்துகின்றது என்றும், திருக்கோயில்களில் ஏதாவது ஒரு பிரபந்தம் சேவிக்க நேரிடும்போதெல்லாம் திருப்பல்லாண்டு, முதலில் சேவிக்கப்பெற்றும் அதன் பின்னரே அக்குறிப்பிட்ட பிரபந்தம் சேவிக்கப்பெறுகின்றது என்ற வழக்கம் இருப்பதால் 'திருப்பல்லாண்டு' ஒரு தனிப்பிரபந்தம்