பக்கம்:வைணவ உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வைணவ உரைவளம் தசையும் வேண்டா நாற்றமிகும் உடலைவிட்டு மாயவன் சேற்றள்ளற் பொய் நிலத்தைக் கடந்து', நலமந்தமில்ல தோர் நாடுபுகும் எண்ணத்துடன் துணிந்து அங்ங்னமே செய்து பரம பாகவதனாகி வீடு பேறும் எய்தினன் என்பது. வரலாறு. 1 4 கமனும்முற் கலனும் பேச, கரகில்கின் றார்கள் கேட்க, கரகமே சுவர்க்க மாகும் நாமங்கள் உடையன் நம்பி; அவனதுார் அரங்க மென்னாது, அயர்த்துவீழ்ங் தளிய மாந்தர் கவலையுள் படுகின் றார்;என்(று) அதனுக்கே கவல்கின் றேனே." (நம்பி-பரிபூரணன்: அளிய-அருமந்த; அயர்த்து -மறந்து; வீழ்ந்து-விஷயாந்தரப் படுகுழி யில் வீழ்ந்து; கவலை-துக்கம்; கவல்தல்கவலைப் படுதல்) இதுவும் திருமாலையில் உள்ள பாசுரம். இதில் ஆழ்வார், 'நாமங்கள் உடைய நம்பியின் திவ்விய தேசம் திருவரங்கம்' என்று சொன்னாலும் போதும்; இங்ங்னிருக்க வும் இவர்கள் விஷயாந்தரப் படுகுழியில் தலை கீழாக விழுந்து வருந்துகின்றார்கள்' என்று கவல்கின்றார். 24. திருமாலை-12 2. இவன் வரலாறு 'விஷ்னு தர்மத்தில் 96-வது அத்தியா யத்தில் கூறப் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/81&oldid=921456" இலிருந்து மீள்விக்கப்பட்டது