பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு மயிலுக்கும், சேவல் மஞ்ஞைக்கும் கடிமணம் நடந்த தென்றேனும் செய்யுள் செய்து இருப்பர். ஆக, இவ் இவ்விரு மணமக்களுக்கு நடந்த திருமணத்தைக் காளைக்கும் மயிலுக்கும் மணம் நடந்ததாகக் கூறி மணத்தைச் சிறப்பித்ததை உன்னிப் பார்க்க வேண் டும். தனதத்தர் பெருந்தனிகர். அவர் குடிக்கு அரும் புதல்வி புனிதவதியார். அவர் ஒரு மகவன்றி வேறு மகவு பெருதவர். ஆதலின், தம் அருமை மகளாரை அகன்றிருக்க மனங் கொண்டிலர். என்ருலும், தம் அணி மாடத்தில் தம்பதிகள் வதிய எண்ணங் கொண் டிலர். பின் யாது செய்தனர் தம் மருமகனர் பொங் கொலி ர்ே நாகைக்கும் போகாவண்ணம், அங்கண் அமர்ந்திருக்கத் தம்பதியின் மாடே, அணிமாடம் தனித்தமைத்துப் புத்தகம் புகும் விழாவும் நடத்தி, விறு கொண்டனர். இதுவே அறிவுடைச் செல்வர் ஆற்றும் செயலாகும். இவ்வாறே கோவலன் கண் ணகியை மணந்த பின்பு தம்முடனின்றித் தனித்து வாழவே இருசார் இரு முதுகுரவரும் நேர்ந்து, அத் தம்பதிகளே மனையறம் இயற்ற ஏற்பாடு செய்ததா கச் சிலப்பதிகாரம் செப்புகின்றது. அத்தலைப்பே மனேயறம் புக்க காதை என்பது. அதன் விரிவை ஆண்டுக் காண்க. புனிதவதியார் பரமதத்தன் உடன்கூடி இல்ல றித்தை இனிது நடத்தலானர். துறந்தார்க்கும் துவ் வாதார்க்கும் இறந்தார்க்கும் துணையாய் இருந்தனர் இவ்விரு தம்பதிகள். தென் புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் ஆதியோர்க்குத் தம் கடன்களே ஒழுங் காக கடத்திவந்தனர்; இயல்புடைய மூவர்க்கும் கல்