பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அழகைத் துறந்த அணங்கு ர்ை. ஏதோ தெய்வத் தவக் குறிப்பால் ஒரு மாங்கனி அவ்வம்மையார் அகங்கையில் வந்துற்றது. அதனேக் கொணர்ந்து அன்புடன் கணவன் முன் படைத்தனர். அதனேயும் உண்ட பரமதத்தன், ' இது முன் தரும் மாங்கனியன்று. இதன் சுவை முன்னேயதினும் விஞ்சி நிற்கிறது, இஃது ஏது ? உண்மையினே ஒளியாமல் உரிைக்கவும் ' என்று உறுமினன். அம்மையார் ஈண்டு இன்னது செய்வதென்றுண ராராய், இடர்க் கடலில் இடர்ப்படுவாரானார். ' அரு ளுடையார் அளித்தருளும் செவ்வியபேர் அருள் " என்று விளம்பவும் விதுப்புற்ருர் : மற்ைத்துச் சொல் லவும் மயங்கினர். இவ்வாறு இருபால் கவர்வுற்று இடையூசல் ஆடி ஒருபால் படாமல் இருந்து, கற்பு நெறி கடவாத காரிகையார் ஆதலின், செய்தபடி சொல்லுவதே கடன் என்று நடந்தவற்றை ஆதியோ டந்தமாக கவின்றிட்டார். இதனைக் கேட்டும் வணி கன் இத்துடன் கிற்கவில்லை. தெய்வத் திருவருளில் ஐயம் கொண்டான். மாதே, நீ ஈசன் அருளால் மாங்கனி பெற்றது வாய்மையானல், மற்ருெரு கனி யையும் வரவழைப்பாய். இன்றேல், நின்னுரையை யான் ஏற்கேன்.' என்றனன். பரமதத்தனைப்போல் புனிதவதியார் ஈசன் அரு ளில் ஐயம் கொள்ளும் நெஞ்சம் வாய்ந்தவர் அல்லர். இறைவன் அருளில் என்றும் உறுதியும் உறைப்பும் உடையவர். உள்ளே சென்ருர். வேண்டுவார் வேண்டு வதே ஈயும் வேணிப் பிரான உளத்தமைத்து, 'உற்ற இடத்து உதவும் உத்தமரே ! மற்ருெரு மாங்கனியை ஈங்களித்து அருளிரேல், என்னுரை பொய்யாகும்.' ள்ன்று வேண்டி நின்ருர் அல்லல் தீர்த்து ஆள