பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு வதும் உணருவதும் இன்ன என இயலாராய் வாளா இருந்தனர். இவற்றை எல்லாம் ஆழ அழுந்த நோக்குங்கால் பரமதத்தனும் புனிதவதியாரும் கொண்ட மணம் எத்துணைப் பொருத்த முடையது. என்பதைச் சிந்திக்க வேண்டாவோ ? அச் சிந்தனையின் முடிவு யாதாக முடியும் இது பொருந்திய மணம் அன்று: பொருந்தா மணமே என்பது தானே போதரும் ? அதனை முன் கூட்டி அன்ருே தொண்டர் சீர் பரவும் தோமில் புலவர் ' தளிரடி மென் நகை மயிலைத்தா தவிழ்தார் காளேக்குக் களிமகிழ் சுற்றம் போற்றக் கல்யாணம் செய்தார்கள் " என்று உவமை முகத் தால் உணர்த்திக் காட்டினர்? கணவனின் சொல்லேயும் செயலேயும் கூர்ந்து நோக்கினர் புனிதவதியார். புனிதவதியார் அகத்து அழகுடையார் போலப் புறத்தும் அழகுடையவர். இவரது அழகை எண்ணிப் பாடுகிருர் அருண்மொழித் தேவர். அம்மையாரைக் குறிக்கும்போதெல்லாம் கவின் பொலியவே கவியும் பாடுகிரு.ர். திருமடங்தை அவதரித்தாள் எனவந்து பொங்கியபேர் அழகு மிகுப் புனிதவதியார் பிறந்தார் ' எனப் பிறப்பைப்பற்றி மொழிந்தார்-முன்னே. ' அணிகினர் மெல் அடி ' என்று திருவடியைப் புனேந்தனர். * அழகின் கொழுந்து எழுவதென வளர்வார்’ என்று வளர்ப்பை வரைந்தார். நுசுப்பு ஒதுங்கு பதம் ' என்று இடை யின் அழகை இயம்பிப் போந்தார். நல்ல என உறுப்பு நூல்வர் உரைக்கும் கலம் நிரம்பி மல்கு பெருவனப்பு மிக்கூரவரு மீாட்சி, என உறுப்பழகு அனைத்தினேயும் ஒருங்கே உரைத்திட்டார். ' தளிரடி மென்னகை