அழகைத் துறங்த அணங்கு 1z மயில் ' என்று சாயல் அழகைச் சாற்றி முடித்தார். “ பூப்பயில் மென்குழல் மடவார்' மண மலியும் மலர்க் கூந்தல் மாதரார் பூங் குழலார் ' என்று கூந்தல் சிறப் பைக் கூறிப்போக்தார். இன்னமும் அம்மையாரது அழகுப் பொலிவை அழகுறப் பாடிய பாடற் ருெட ரைக் காட்டப் புகின், பரக்கும் என்று இத்துடன் சுருக்கப்பட்டது. மற்றும், அம்மையாருக்கிருந்த செல்வ நிலையோ செப்பத் தரமன்று. அம்மையார் ஓங்கிய பேர் இல் எய்தி வாழ்ந்தனர். மேலும், தம்மை நாடி வந்தவர்க்கு நல்ல திருவமுதளித்தும், செம்பொன்னும், நவமணியும், செழுந்துகிலும் முத லான வேண்டுவ கொடுத்து வாழ்ந்தனர் என்பதையும் நன்கு அறியலாம். இவ்வாறு உருவும் திருவும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வம்மையார் கணவனுக்கு உகந்தது ஆகாத வாழ்வை உடனே வெறுத்தார். தமக்கு அமைந்த வனப்புப் பிறர் மகிழ இன்றிக் கணவனுக் கென அமைந்ததென்று எண்ணி, ' இவனுக்காகத் தாங்கிய வனப்பு' என்று கூறி அதனே எள்ளி நின்ருர், எங்கும் நிறைந்த இறைவனே நோக்கினர். இறைவா, இத்தசைப் பொதி கழித்துப் பேய் வடிவு அடியேனுக் குப் பாங்குற அளித்தல் வேண்டும் ' என்று பரவி நின் ருர். அம்மையாரும், எண்ணிய எண்ணியாங்கு எய்தி ர்ை. வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் உற்ருர். அம்மையார் நிலையைக் கண்ட ஒக்க லும் கட்பும் பரமதத்தன் கூற்றை உண்மை என்று உணர்ந்தனர். அவர்களும் தொழுது இறைஞ்சி அகன்று போனர். அம்மையார் கருவிலே திருவுடை - 2