பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உள்ளத் துறவுடைய உத்தமீ அம்மையாரைப் பற்றிச் சிறிது ஈண்டு ஆராய்வோ ԱԸ)II Ց5 - தமிழ் நாடு காற் பெரும் பிரிவினையுடையது. அவையே பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு, தொண்டை நாடு என்பன. இந் நாற் பகுப்புடன் ஐந்தாவது பகுப்பாக நடு நாடு என்ப்தும் ஒன்று உண்டு. இது சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே இருத்தலின் இதனை நடு நாடு என்று நவின்றனர் போலும். இந் நாட்டிற்கு அழகு செய்யும் உள் நாடுகளில் திருமுனைப்பாடி நாடும் ஒன்று. எல்லாத் துறையி லும் இது முனைந்து முன்னிற்றலின் இப்பெயர் பெற் றதோ என்னவோ அறியோம். திருமுனைப்பாடி நாடு மிகத்தொன்மையானது. மாசு ம்று ஏதும் கூற இயலாத நிலையில் துலங்கியது. இதில் குடிவளம் சிறந்து இருந்தது. அக்குடிகளும் ஒழுக்கத்திலும் ஏனைய கற் செயல்களிலும் தலே சிறந்து விளங்கினர். 'திருக்கோவில் இல்லாத்திருவில் ஊர் ' என்று செப்ப இயலா நிலையில் கோயில்களே யும் தன்னகத்தே கொண்டது இந்நாடு. நாட்டுக்கு எல்லா நலன்களும் இருப்பினும், ஆற்று கலன் இன்றேல், அழகும் இன்று வளமும் இன்று. இதல்ை அன்ருே, ‘ ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் ” என்று ஒளவையாரும் அறிந்து கூறி னர். அந்தக் குறையும் இந்தப் பதிக்கு இன்று. இப்பதி பெண்ணை நதி பாயும் பெருமை பெற்றது. அப்பதியில் பெண்ணையாறு பாயும் பெருமிதம் பேர் அழகுடையது. அது பாய்ந்து வரும் வேகத்தால் வயல்களில் உள்ள முத்துக்களையும் காட்டுமலர்களே