3. கொண்களுர்க் கேற்ற கோதை மக்கள் மேற்கொள்ள வேண்டிய அறம்,இரண்டு. ஒன்று இல்லறம், மற்ருென்று துறவறம். முன்னையது எளிது. பின்னேயது அரிது. காயனர் துறவறத்தைப் பற்றிக் கூறும்போது 'அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று ' என்று கூறுகின்றனர். ஈண்டு அஃது என் றது துறவறத்தை என்க. 'அஃது பிறன் பழிப்பது இல்லையாயின் கன்று ” என்று கூறுதலினின்று அதனே மேற்கொள்ளுதல் அருமையுடைத்தென்பது அறியக் கிடக்கிறது. மேலும், அப் பெரியார் இல்ல றத்தைப் பற்றிய கருத்தை உற்றுநோக்கின், 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் ? ' என்று வினவும் முகத்தால், துறவறத்தில் துன்புற்று எய்தும் பேற்றினை இல்லறத்தினின்றே இனிதுற எய் தலாம் என்பது பெறப்படுகிறதன்ருே? இவ்வாறு துறவற நெறியினே மேற்கொளாமல் இல்லற நெறியினின்றே அழியா இன்பம் அடைந்தவர் உளரோ எனில் உளர் என்க. அவரே அப்பூதி அடி *களார் என்னும் அந்தணப் பெரியார் ஆவர். இல் லறத்தினின்றே திருநாவுக்கரசர் என்னும் திருப் பெயரை எழு தியும் சொல்லியுமே துன்பில் பதம் பெற்ருர். அவர் பெற்ற நிலையினை பெட்புறப் பேசி • னர் சிவப்பிரகாசர்.