பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கொண்களுர்க் கேற்ற கோதை மக்கள் மேற்கொள்ள வேண்டிய அறம்,இரண்டு. ஒன்று இல்லறம், மற்ருென்று துறவறம். முன்னையது எளிது. பின்னேயது அரிது. காயனர் துறவறத்தைப் பற்றிக் கூறும்போது 'அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று ' என்று கூறுகின்றனர். ஈண்டு அஃது என் றது துறவறத்தை என்க. 'அஃது பிறன் பழிப்பது இல்லையாயின் கன்று ” என்று கூறுதலினின்று அதனே மேற்கொள்ளுதல் அருமையுடைத்தென்பது அறியக் கிடக்கிறது. மேலும், அப் பெரியார் இல்ல றத்தைப் பற்றிய கருத்தை உற்றுநோக்கின், 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் ? ' என்று வினவும் முகத்தால், துறவறத்தில் துன்புற்று எய்தும் பேற்றினை இல்லறத்தினின்றே இனிதுற எய் தலாம் என்பது பெறப்படுகிறதன்ருே? இவ்வாறு துறவற நெறியினே மேற்கொளாமல் இல்லற நெறியினின்றே அழியா இன்பம் அடைந்தவர் உளரோ எனில் உளர் என்க. அவரே அப்பூதி அடி *களார் என்னும் அந்தணப் பெரியார் ஆவர். இல் லறத்தினின்றே திருநாவுக்கரசர் என்னும் திருப் பெயரை எழு தியும் சொல்லியுமே துன்பில் பதம் பெற்ருர். அவர் பெற்ற நிலையினை பெட்புறப் பேசி • னர் சிவப்பிரகாசர்.