தேவி அநுபூதி 25 39. என் மனப்பாழ் அறை தேவியின் பள்ளி அறை ஆகுக மதுவார் பொழில் முல் லைவனத் துமையே! இதுகேள், எனதிம் மனப்பாழ் அறையைப் புதுவி நிறைகின் பொலன்பள்ளியறை அதுவே என ஆக் கிடுரீ அரசீ ! (உ) தேன்நிறை மலர்ப்பொழில் சூழும் முல்லை வனத்துத் தேவியே! நான் சொல்வதைக் கேட்டருளுக. என்னுடைய இந்த மனம்'என்னும் பாழான அறையை நீ உனது புதுமலர்ப் பொன்மயப் பள் ளியறையாக ஆக்கி அமர்ந்தருளுக. (கு) மது - தேன் , வீ-மலர்; பொலன் - பொன். ' என் சிந்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கி'- கழுமல மும்மணிக்கோவை(பட்டினத்தார்)-4. 40. சிவபிரான் தேவியின் மகன், தந்தை எப்படி ? பொன்னேர் சடையன் புனிதன் இறைவன் என்னேயிது ! கின் மகன் அத்தனெனத் தன்னேர் மணி வாசகர் சாற்றுகின்ருர் அன்னே!அதன் மெய்ப்பொருள் யாதுரையாய். (உ) தேவி! ப்ொன்னிறச் சடையை உடைய சிவ பெருமான் உனக்கு மகன் எனவும், தகப்பன் எனவும், தனக்குத்தானே இணையான மணிவாசகர் சொல் கின்ருரே. இது என்ன ஆச்சரியம் ! தாயே! இதன் மெய்ப் பொருள்தான் யாது ! உரைத்தருளுக.
- (கு) இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்எம் ஐயன்-திருவாசகம்,9-13.