பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

கைதிகளின் கரையிலாக் கருணை.


செக்கினை என்னொடு சேர்ந்து தள்ளியோர்
“நாங்களே தள்ளுவோம். நமன்கள் போன்ற
சுப்பிரண் டெண்டு காட்ஸனும் ஜெயிலரும்
வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்;
போய்நிழல் இருந்து புசிமின் எள்ளும்
வெல்லமும்" என்றே விளம்பினர் அன்பொடு.
செய்தேன் யான்அவர் செப்பிய வண்ணம்.
ஒருநாள் டாக்டர்பால் சிலகை திகளுடன்
போய்வா என்றான்; தீநிகர் ஜெயிலர்.
“சிரிக்கிறாய். என்?" னெனச் செப்பினான் டாக்டர்.
117

 

117