பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

கைதிகளின் கரையிலாக் கருணை.


செக்கினை என்னொடு சேர்ந்து தள்ளியோர்
“நாங்களே தள்ளுவோம். நமன்கள் போன்ற
சுப்பிரண் டெண்டு காட்ஸனும் ஜெயிலரும்
வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்;
போய்நிழல் இருந்து புசிமின் எள்ளும்
வெல்லமும்" என்றே விளம்பினர் அன்பொடு.
செய்தேன் யான்அவர் செப்பிய வண்ணம்.
ஒருநாள் டாக்டர்பால் சிலகை திகளுடன்
போய்வா என்றான்; தீநிகர் ஜெயிலர்.
“சிரிக்கிறாய். என்?" னெனச் செப்பினான் டாக்டர்.
117

 

117