பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிறையில் ஒர் வேடிக்கை


மெய்யில் வெளுத்த வேஷ்டி, உடுத்துக்
கஞ்சியும் உணவும் கொண்டுவரச் செய்தான்.
ஜாதியே தங்கள் பாரேன் எனினும்,
தனியே சமைத்த 'புனித உணவைக்
கொள்ளயான் விரும்பிக் கொண்டுவந் தவன்பால்

  • விள்ளடா உன்னூர்; விளம்படா உன்குலம்"

என்றேன். அவன் தான், "என்னூர் மதுரை;
என்குலம் சைவம்" என்றான், “ஜாதி
என்னடா? என்றேன். என்றான் - முதலி.

  • என்னடா முதலிநீ" என்றேன். விழித்தான்.

“பார்ப்பான் அல்லது பாண்டிவேளாளன்
சாப்பா டாக்கித் தந்தால் உண்பேன்
என்று ஜெயில் பால் இயம் "பெனச் சொன்னேன்.
நன்றெனச் சென்றான். நான் உணாதிருந்தேன்
மூன்று நாள் இங்ஙனம் முடிந்தன. காட்ஸன்
தோன்றினான் என்முன் ; சொன்னேன் நடந்ததை.
ஆறுமுகம் பிள்ளை யாரிடமும் உண்கிறான்.
கூறுக நின்னுடை குலந்தான் மேலோ?"
என்றான் காட்ஸன். நன்றா அவன்சொல்
கேளாத தாலவன் கிட்ட நெருங்கினேன்
ஓடினன் அப்ஸ்டெயர்ஸ். 'உடனே வெளிநின்று
பார்ப்பான் ஒருவனைக் கூப்பிட்டுணவினை
ஆக்கி அளித்தவன் சாப்பிட்ட பின்னர்க்
1 புனித உணவ-சைவ உணவு.
1
134

 

134