பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பெனியிலிருந்து ராஜினாமா.


வேலையை விடும்படி விரும்பினர்

                       எமனவர்

சாலவும் நன்றெனத் தந்தேன் எழுதி. உடனென் னுடலா யுடனின் றுழைத்துத் திடனுடன் நாவாய்ச் செவ்விதிற்

                        காத்துத்

தன்பெயர் என்பின் தனையற் கீந்த அன்பு நிறைந்த * ஆறுமுகம் அருணாசலமுதல் அன்பர் பலரும் “ ஒருநாளும் அவனிலா துருப்படா

                        நாவாய்"

என்றுரை கூறி எழுந்தனர் வெகுண்டு. பின்றொடர்ந் தவரைப் பேணிக்

                     கொணர்ந்தே.



ஆறுமுகம்-சி. த. ஆறுமுகம் பிள்ளை.

அருணாசலம்-வியாபாரி அருணாசலம் பிள்ளை.


53