பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு நான்யா ரெனத்தெரிய நாடுவையேல் தாம்பரமார் வான்யாறு சார்ந்ததிரு மந்திரத்தின் - கோன்யான் எனமொழிவர் பாவலரும் ஏழையாரும் நாவாய்த் தன்மிக முன் பெற்றேன்பான் தான். " ஸ்ரீ எள்ளிநாயக சுவாமியவர்களுக்கு எழுதிய பாக்கள். சிந்தையும் அறிவும் செல்லா வீட்டினில் சந்ததம் வாழுமென் தாய்நிகர் நாயக! ஆதியில் சுந்தரன் அழகிய செய்யுட் கோதிலா நிதிபல கொண்டவன் மனைக்கு மாற்றாக நின்றசிறு மங்கைபால் நடந்தவள் ஆற்றாத ஊடலை ஆற்றியவ் விருவரும் செறிவுற் றிருக்கச் சிறுதொழில் புரிந்தொரு மறுவினை அவற்கு வழங்கியும் அவனது வீட்டினைப் பறித்தும் வெறுமைமய மாகிய வீட்டினைக் கொடுத்தும் வேண்டுவ துறந்து சுகமுறத் தவஞ்செய் தூய அவன் சகோதரர் அகமெலாம் கவர்ந்தவண் அமர்ந்துள சிவனோ, இந்நாள் என்னிடம் எஃதுமே பெறாது பொன்னா ணயமொடு புகழ்பல திரட்டி எனக்கும் என்னுயர் இல்லாட்கும் மகார்க்கும் மனக்குது குலிப்பொடு வழங்கியென் மனையின் மாற்றாட் பிரித்தவள் மறைந்திடப் பார்த்துக் காற்றா விரைந்து கடவுளாக் காத்தென் 58