பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பு. மனம்போலவாழ் வென்று மாநிலத்திற் பல்லோர் தினந்தோறும் சொல்மொழியைச் சிந்தித் - தினங்கூட்டி ஆங்கிலத்தில் ஜேம்ஸ்ஆலன் ஆக்கியநூ லைத்தமிழில் ஈங்குரைக்கச் செய்வான் இறை. அடக்கம். அறிவுமிகும் ஆன்றோர் அவையடக்கம் என்றும் அறிவு தரும் மாண்பால் அறைவர்.- அறிவில் சிறியேனும் அஃதுரைத்தல் சீரியனாக் காட்டும் குறியாகும் என்றயிர்த்தேன் கொண்டு. பயன். இந்நூற் பொருளை இனிதுணர்ந்து கைப்பற்றி இந்நூற் படியொழுகின், இப்பிறப்பில் - நந்நூலின் இம்மை மறுமைகளை எய்திப்பின் வீடடையும் செம்மைநெறி காண்போம் சிறந்து. பிரார்த்தனை தெய்வப் புலமைத் திருவள்ளுவர் வாழ்ந்த தெய்வப் பொருளே சிறந்தொளிரும்-தெய்வத் அமிழ்துன்று நாட்டுறையும் தக்கோர்காள்! இஃதன் அமிழ்துண்டு செய்க அறம். 16