பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' தொல்காப்பியம் - இளம்பூரணம் சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்குகணத்துக்கண்னும் செல்லு மென்பதாகலின், மகவின் ஞாண் என இயல்புகணத்துக்கண்ணம் கொள்க. (கச) உகக, அத்தவண் வரினும் வரை நிலை யின்றே . இதுவும் அது. இ-ள்:--அத்து அவன் வரினும் வரை நிலை இன்று-மேற்கூறிய இன்னேயன்றி, அத்து என்னும் சாரியை இயைபுவல்லெழுத்தினோம் அம் மச என்னும் சொல்லிட த்து வந்து முடியினும் நீக்கும் நிலைமை இன்று. உ-ம். மகத்துக்கை; செவி, தலை, புறம் எனச்செய்சை அறிந்து முடிக்க, 'அவன்' என்றதனால், மகப்பால்யாம் என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்வும், உருவிற்குச் சென்ற சாரியை பொருட்கண் வந்த வழி விளவின் கோடு என இலயபுவல்லெழுத்து வீழ்வும் கொள்க. நிலை' என் றதனால், மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பேறும் சொள். (கன) 2.உய, பலவற்றி அதி புருபிய னிலையும், இஃது, அகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் இதலிற்று, இ-ள் :- பலவற்று இறுதி உருபு இயல் கிலையும்-பல என்னும் அகரவீற்றுச் சொல் உருபுபுணர்ச்சிக்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந்த இயல்பின் கண்ணே நிற்கும். உ-ம். பலவற்றுக்கோடு; செவி, தலை, புரம் எனவரும். உ.க ஆகார விறுதி யகர விபற்றே , இஃது, ஆகாரவீற்றுப்பெயூர் அல்வழிக்கன் முடியுமாறு உணர்த்துதல் இத விற்று, இ-ள் :--ஆகார இறுதி அகர இயற்று-ஆகாரவீற்றுப்பெயர் (அல்வழிக்கண்) அகரவீற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்துப் பெற்று முடியும். 8-ம். தாராக்கடிது, சிறிது, தீது, பெரிது என வரும், உ.உ. செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். இஃதி, அவ்வீற்ற வினைச்சொல் முடிபுறுதல் தலிற்று. இ'ன்: - செய்யா என்னும் வினை எஞ்சு கிளவியும்-(பெயரேயன்றி) செய்யா என்று சொல்லப்படும் தகாரவீற்று விளையெச்சச்சொல்றும், - இயல் திரியாது என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்குமுடியும் அவ்லியல்பில் திரியாதென்று சொவ்துவர் புலவர். உ-ம். உண்ணக்கொண்டான், சென்ன்ை, தந்தான், போயினான் எனவரும். 'திரியாது' என்றதனால், செய்யா' என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடிவு மெனக்கொள்க, உண்ணக்கொற்றன் எனவரும். (2)