பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் என்பது ப்ரதிமா என்னும் வடமொழித்திரிபு. அது தேவர்க்கு ஒப்புமையாக நிலத்தின் கண் செய்து அமைத்த தேவர்மேல் வந்தது. அவருடைய பொருளாவ பூசையும் விழா வும் முதலாயின. "முல்லை முதலாச் சொல்லிய' என்பது "பிறந்தவழிக்கூறல்" [சொல்-கத்) என்னும் ஆகுபெயரான் அங்கிலத்தின்மக்களை நோக்கிற்று. 'பிரிவு' என்பதனை, பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் பிரிவுனதாம், இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவுளதாம் என இரண்டிடத்துங் கூட்டுக. ஆம் என்பது எஞ்சிநின்றது. தேவர் காரணமாகப் பிரியும் பிரிவுக்குச் செய்யுள்:- அரம்போ ழவ்களை தோணிலை ஞெகிழ S (6 இரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி ஈர்ங்கா ழன்ன வரும்புமுதி நீங்கை ஆலி யன்ன வால்வீ தாஅய் வைவா லோதி மையண லேய்ப்பத் தாதுறு குவளைப் போதுபிணி யவிழப் படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅ மாறிய யானை போலப் பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் திழிதரப் பனிபட நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வலவரின் விரியுளைப் பொலிந்த பரியுடை மன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருளைக் கரிகான் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற ஒன்பது குடையும் நன்பக லொழித்த பீடின் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே" [அகம் - கஉகூ] எனவரும். சேரன் செங்குட்டுவனார் கண்ணகியைக் கடவுள்மங்கலம் செய்தற்குப் பிரிந்த பிரிவு சிலப்பதிகாரத்திற் கண்டுகொள்க. இத்துணையும் பிரிவு அறுவகைப்படும் என் றவா றாயிற்று. அஃதேல் பரத்தையிற் பிரிவு என்பதோ எனின், அது நிலம் பெயர்த்து உறையாமையானும், இவைபோற் சிறக்காமையானும், அறமுறைமை செய்யப் பிரித லும் பொருள்காரணமாகப் பிரிதலுமின்றிப் பிரிதலினானும், கற்பியலுள் கூறப்படும் ஈண்டும் சிறுபான்மை கூறுப. என்க. (கூய) ஙக. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே. இது, நிறுத்த முறையானே அறம்காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த் துதல் நுதலிற்று. 4: