பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காட்பியம் - இளம்பூரணம் ரின் நின்ற யாக்கை, இருநிலம் தீண்டா அரு நிலைவகையொடு-நீர் அட்டை காலவயட் பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால் பட்ட ஒரு சிறப்பின் று-இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்று ஆடலொத்த பண்பினை அடையது. [இருகிலம் தீண்டா அரு-நீருட் கிடக்கும் அட்டை.) (Was) GT 2... தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும் வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவ னொருவனை யுடையடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளு மேமத் தாங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ் செருவகத் திறைவன் வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவர் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீயே தூழிலு முளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. இது, தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் முதலிற்று. இ-ன்:-- நோனார் உட்கும் தானை யானை குதிரை என்ற மூங்கை நிலையும் பகைவ ரால் உட்கப்படுகின் நதானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றினது நிலையும். தானை நிலை வருமாறு:- வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக் கண்கூ டிறுத்த கடன் மருள் பாசறைக் குமரிப்படை தழீஇக் கூற்றுவினை யாடவர் தமர்பிற ரறியா வமாமயங் கழுவத் திறையும் பெயருந் தோற்றி னுமருள் காண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும் அரமிழ் மணியிற் குறுகார் கிரைத்தார் மார்பினின் கேள்கனைப் பிறரே." [புறம் - உகூச] "கைவேல் ககளிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் புறியா கரும்." (குறன் -எஎச}