பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் இருளென் கிளவி வெயிலிய னிலையும். இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- இருள் என் கிளவி லெயில் இயல் நிலையும் - இருள் என்னும் சொல் (வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்) வெயில் என்னும் சொல்லின் இயல்பிலே (நின்று அத்தும் இன்னும் பெற்று) முடியும். உ-ம். இருளத்துக் கொண்டான், இருளிற் கொண்டான்; சென்றான், தந்தான், போபிஷன் எனவரும். சாச. புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரிய. (ITTST) இதுவும், அவ்வீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வருத்தல் நுதலிற்று. இ-ள்:- புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல் - புன் என்னும் சொல்லுல் வள் என்னும் சொல்லும் (வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் ஞகார ஈற்றுத் ) தொழிற்பெயர் இயல்பிற்றாய் (வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும்) முடியும். உ-ம. புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, நீண் டது, மாண்டதி, வலீது எனவும்: புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுறை; சிறுமை, தீமை பெருமை ; ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இதனைத் "தொழிற்பெயரெல்லாம் என்றதன் பின் வையாத முறையன்றிய கூற்றினான், இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவும் கொள்க. உ-ம். புட்கடிது, வட்கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மாண்டது, வலித எனவும்: புட்கடுமை, வட்கடுமை; சிறுமை, தீமை, பெருமை; ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இன்னும் அதனானே, பள் என்பதன் கண்ணும், கள் என்பதன் கண்ணும் இரு வழியும் இவ் விரு முடிபு பெற்றவழிக் கொள்க. பள்ளுக்கடிது, கள்ளுக்கடிது; பள்ளுக்கடுமை, கள்ளுக்கடுமை எனவும்: பட் கடிது; கட்கடிது; பட்கடுமை, கட்கடுமை எனவும் ஒட்டுக. சளடு. மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. (ளஅ இது, மக்கள் என்னும் உயர்திணைப்பெயருக்கு "உயிலிருகிய வார்திணைப்பெய ரும்" [தொகை மரபு - சூத்திசம் மிக] என்பதனுள் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இரன்:- மக்கள் என்னும் பெயர்நிலை கிளவி - மக்கள் என்னும் பெயர்ச் சொல்லின் இறுதி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து-இயல்பேயன்றித்) தக்க இடம் அறிந்து வல்லொற்றாய் (த்திரித்து) முடிதலும் ஆம். 'தக்கவழி' என்றதனால், அம்மக்கள் உடம்பு உயிர்நீங்கிய காவத்து இம்முடிபு எனக்கொள்க.