பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல் சஙக. உண்டென் கிளவி யுண்மை செப்பின் முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉங் காலை யான. ளச இது, மென்றொடர்மொழியுள் ஒரு வினைக்குறிப்பு மொழிக்கு வேறு முடிபு கூறு தல் நுதலிற்று. இ-ள்:-உண்டு என் கிளவி உண்மை செப்பின் - உண்டு என்னும் சொல் (உண்டு என்னும் தொழில் ஒழிய ) உண்மை என்னும் பண்பு உணர நிற்கும் இடத்து, முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் மேல் நிலை ஒற்று னகாரம் ஆதலும் - முற்பட்ட ஈற் றுக் குற்றியலுகரம் (தான் எறி நின்ற) மெய்யோடும் கெடுதலும் அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகாரம் ஆதலுமாகிய, அ முறை இரண்டும் உரிமையும் உடைத்து அம் முறைமையுடைய இரண்டினையும் உரித்தாதலும் உடைத்து, வல்லெழுத்து வரும் காலை - வல்லெழுத்து முதல்மொழி வருங்காலத்து. வல்லெழுத்ததிகாரம் வாரா நிற்ப, ('வல்லெழுத்து வரூஉங்காலை' என்றதனான் ) இவ் இருமுடிபும் உள்ளது பகர முதல்மொழி வந்தால், மற்றை மூன்று எழுத்தின் கண்ணும் ஈறு கெடாதே நின்று முடியும் என்று கொள்க. இன்னும் அதனானே, இயல்பு கணத்து இறுதி கெடாதே முடிதல் கொள்க. உ-ம்:- உள் பொருள், உண்டு பொருள் எனவும்: உண்டு காணம், உண்டு சாக் காடு, உண்டு தாமரை எனவும்: உண்டுஞாண்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். 'உள்பொருள்' என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ எனின், அஃது ஓசை ஒற்றுமைபடச்சொல்லும் வழியது; இஃது, ஓசை இடையறவுபடச்சொல்லும் வழியது போலும். [உண்மைப்பண்பாவது, ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந் துணையும் உண்டாய் நின்ற தன்மை. 'ஏகாரம்' அசை. அகர நீட்டமும் உகர நீட்ட மும் செய்யுள் விகாரம். 'ஆன்' இடைச்சொல்; அகரம் சாரியை.] (உரு) இது, குற்றுகர ஈற்றுத்திசைப் பெயர்க்கு அல்வழிக்கண் வேறு முடிபு கூறு கின்றது. இ-ள்:- இருதிசை புணரின் ஏ இடை வரும்-இரண்டு பெருந்திசைகள் (தம் மிற்) புணரின் ஏ என்னும் சாரியை இடை வந்து புணரும். உ-ம்:- வடக்கே தெற்கு, கிழக்கே மேற்கு எனவரும்.('ஏகாரம்' ஈற்றசை) (உசு) திரிபுவேறு கிளப்பி னொற்று மிறுதியும் கெடுதல் வேண்டு மென்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான.