________________
ஙச தொல்காப்பியம் இளம்பூரணம் 'யாப்புற' என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்றுவளியும், வல்லெழுத்திற் குத் தலைவளியும் கொள்க. ளக. சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பித் பிறப்பொடு சிவணி ஒத்த காட்டுயித் தம்மியம் பீயனும், இது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (கஅ) இ-ள் :-சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப் படுத்த ஏனை மூன்றும்-சிலவற்றைச் சார்ந்துவரின் அல்லது தமக்குத்தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி ஒந்த காட்சியில் தம் இயல்பு இயலும் - தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே பிறத்தலொடு பொருந்தி பொருந்தின அவ்விடத்தே தமக்குரிய இயல்பில் நடக்கும். நிழத்தகாட்சி' என்றதனும், ஆதேத்திக்குக் குந்றெழுத்துச் சார்பேனிெலும் தலை வளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்கு மென்பது கொள்க. 'தம்மியல்பியலும்' என்றதனான், அளபெடையும் உயிர்மெய் யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. உ. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியுற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாசத் தகத்தெழு வளியிசை யரிற்ப நாடி யளவிற் கோட லந்தணர் மறைத்தே. (கக) இஃது, எல்லா எழுத்திற்கும் ஆவதோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- எல்லா எழுத்தும்-எல்லா எழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்ளி-வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழு தரு வளியின் - எழுகின்ற வளியானே, பிறப்பொடு விடுவழி - தாம் பிறக்குந் தொழிலு டைய வாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, உறழ்ச்சி வாரத்து அகத்து எழு வளி இசை- திரி தருங்கூற்றையுடைய உண்ணின்று எழும் வளியானாய இசையை, அரில் தப நாடி-பிணக்கமற ஆராய்ந்து, அளபின் கோடல்-மாத்திரை வரையறையாற் கோடல், அந்தணர் மறைத்து-பார்ப்பார் வேதத்துக்கண்ணது. உறழ்ச்சி வாரம் என்றது, உந்திமுதலா எழும் வளி தலகாறும் சென்று மீண்டு நெஞ்சின்கண் நிலைபெறுதலை எனக்கொள்க. வளி என்னாது வளியிசை என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறும் அளவும் வளி எனப்படுவது பின்னை நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாம் தன்மைய தாம் என்பது விளக்கிகின்றது. (ஏகாரம் ஈற்றசை.) ளஙு. அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே. இது, மேற்குத்திரத்திற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (உய)