பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம்-புணரியல் ௩௯ இடையும் உரியும் பெயர் வினைகளை அடைந்தல்லது தாமாக நில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறப்பட்டது. [இடை-இடைச்சொல். உரி-உரிச்சொல். 'ஆங்கு' என்பது அசை. முதல் மூன்று ஏகாரமும் தேற்றப்பொருளில் வந்தன. நான்காம் ஏகாரம் ஈற்றசை.) ளய. அவைதாம் மெய்பிறி தாதன் மிருகங் குன்தவென் றிவ்வென மொழிப திரியு மாறே. இது, மேற்கூறிய திரிபுமூன்றும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. () இ-ள் :- அவைதாம் -அத்திரிபுதான், மெய்பிறி துஆதல் மிகுதல் குன்றல் என்று இவ் என மொழிப திரியும் ஆறு - மெய்பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இவை எனச் சொல்லுவர் திரியும் நெறியினை. பென்று கொள்க. இம்மூன்றும் அல்லாதது இயல் உ-ம். பொற்குடம், யானைக்கோடு, மரவேர் எனவரும். குவளைமலர் என்பது இயல்பு. இப்புணர்ச்சிநான்கும் ஒருபுணர்ச்சிக்கண்ணே நிகழ்வு பெறுமென்பது உரை யிற்கொள்க. மேல் 'இடம்' [புணரியல் - சு) என்றதனால், ஒருபுணர்ச்சிக்குத் திரிபு மூன்றனுள் ஒன்றாயினும் இரண்டாயினும் மூன்றாயினும் வரப்பெரும் எனக்கொள்க. 'மகத்தாற் கொண்டான்' என்பது அம்மிகுதி இரண்டுவந்தது. 'நீயிர் குறியிர்' என்பது அம்மிகுதி மூன்றுவந்தது. பிறவும் அன்ன. [முதல் உதாரணத்தில் 'அத் திரிபு மூன்று வந்தது' என்றிருத்தல் வேண்டும். இரண்டாம் உதாரணம் பிழை. இப்பிழைகள் ஏடுபெயர்த்தெழுதினோரால் நேர்ந்தன போலும். ணிடைச்சொல்.] ளகக. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. 'என்று' எண் இது, "நிறுத்தசொல்லே குறித்துவருகிளவி" [புணரியல்-ரு] என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் -நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக்குறித்து வரு சொல்லும், அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய-தாமேவந்து புணர்வதன்றி,) அவையிரண்டினும் ஒரோர் சொல் லடைவந்து ஒன்றித்தோன்றினும் புணர்நிலைக்கு உரிய. உ-ம். பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, எனவரும். பதினாயிரத்தொருபஃது ஈண்டு அடையென்றது உம்மைத் தொகையினையும், இருபெயரொட்டுப் பண் புத்தொகையினையும் எனவுணர்க. அவையல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும், பண்புத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொ ழித்தொகையும் தனக்கு வேறு ஓர் முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி, ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமைத்தொகையும் "தன்னினமுடித்தல்" என்றதனான் ஈண்டு ஒருசொல் எனப்படும். உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒருசொல் எனப்படும். பிறவும் அன்ன. (