பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் 'பிறவும்' என்றதனால்,தம்,நம்,நும்,எம்,கெழு, ஏ, ஐ,ஞான்று என்பனவுங் கொள்க. "எடுத்த நறவின் குலையலங் காந்தள்' என்புழி 'அலம்' என்பதோர் சாரி யையும் உண்டாலெனின், அதனை 'அலங்கு காந்தள்' என்பதன் விகாரமென்ப. இன்சாரியை வழக்குப் பயிற்சியானும் நூலுட் பலகாலும் எடுத்தோதப்படலானும், வாளா ஓதியவழி தானே சேறலானும் முன்வைக்கப்பட்டது. அன்சாரியையும் அதுபோலச் சிறப்புடைமையின் பின் வைக்கப்பட்டது. இடை நின்றவற்றியல்பும் அறிந்துகொள்க. (முதல் எட்டு ஏகாரமும் எண்ணிடைச்சொல். ஒன்பதாம் ஏகாரம் ஈற்றசை.) (கஎ) ளஉக. அவற்றுள் இன்னி னிகர மாவினிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும் இஃது அவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுதல் நுதலிற்று இ-ள்: அவற்றுள் மேற்கூறப்பட்ட சாரியைகளுள், இன்னின் இகரம் ஆவின். இறுதிமுன்னர் - இன்சாரியையினது இகாரம் ஆ என்னும் சொல்லீற்றுமுன்னர், • கெடுதலும் உரித்தாகும் - கெடாமையேயன்றிக் கெடுதலும் உரித்தாம். உ-ம். ஆனை, ஆவினை, ஆன்கோடு, ஆவின்கோடு எனவரும். 'முன்னர்' என்றதனான், 'மா' என்னும் சொல்லின் முன்னும் அவ்விரு விதியும் எய்தும். மானை,மாவினை, மான்கோடு, மாவின்கோடு எனவரும். ளஉஉ. அளபாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை இக்காள் அக்கா குகிய கிலைத்தே இஃது, இன்னிறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (கஅ) இ-ள்:-அளபாகும் மொழி முதல்-அளபுப்பெயராகும் மொழியின் முதற் கண், நிலைஇய உயிர்மிசை னஃகான் - நிலைபெற்ற உயிர்க்குமேலாய்நின்ற இன் சாரியையது னகாரம், றஸ்கான் ஆகிய நிலைத்து-றகாரமாகிய நிலைமைத்து பதிற்றகல், பதிற்றுழக்கு என்பழி அவ்வாறு வருதல் அறிக. 'நிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. பதிற்றொன்று, பதிற்றேழு எனவரும். ள உ௩. வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. இது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (கக) இ-ள்:-சுட்டு முதல் ஐமுன்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார யீற் றுச் சொல்முன்னர், வஃகான் மெய் கெட அஃகான் நிற்றல் ஆகிய பண்பு-வற்றுச் சாரியை தன் வகரமாகியமெய்கெட அகரம் நிற்றலாகிய பண்பினையுடைய. அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவும், அவையற்றுக்கோடு என வும் வரும். 'ஆகிய பண்பு' என்றதனால், சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி, வற்றின் வகரம் அகரம் நிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்த. மற்றிது, "கிரிந்ததன்றிரிபு பிறிது" என்னும் நயத்தாற் கெடாதே நிற்கு மாகலின்,