பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூகூ நொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது: ஈகாரவீற்றுள் ஒருமொழிக்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இ-ள்:-நீ என் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் - நீ என்னும் ஒரு பெயர் நெடி தாகிய முதல் குறுகும்; அ வயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்துவரும் னகரம் ஒற் றாகும். உ-ம். நின்னை, நின்னொடு என ஒட்டுக. 'ஒரு பெயர்' என்றது,நின் என்பதும் வேறொகு பெயர்போறலை விலக்கிற்று. பெயர்குறுகும் என்னாது முதல்குறுகும் என்றது, அப்பெயரின் நெட்டெழுத்து நிலை யது அக்குறுக்க மென்றற் கென்பது. நெடுமுதல் என்றது அம்மொழிமுதலின் நகரம் குறுகுதலை விலக்கிற்று. ஈண்டு, உயிர்மெய்யொற்றுமைபற்றி நெடியது முதலாயிற்று. சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியது, மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே வந்த அதிகாரம் மாற்றி நின்றது. ள அரு. ஓகார விறுதிக் கொன்னே சாரியை. இஃது, ஒகாரவீறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (எ) இ-ள் :- ஒகார இறுதிக்கு சாரியை ஒன் - ஒகாரவீற்றுக்கு இடைவரும் சாரியை ஒன் சாரியை. உ-ம்- கோஒனை, கோஒனொடு என ஒட்டுக. ளஅ க . அ ஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் யெ மே வருமே (அ) இஃது, அகா ஆகாரவீற்றுட் சிலமொழிக்கு, உருபின்கண் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:-அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு-அ ஆ என்று சொல்லப்படும் மரத்தை உணரநின்ற பெயராகிய சொற்கு, அத்தோடும் சிவணும் ஏழன் உருபு -முன் கூறிய இன்னோடன்றி அத்தோடும் பொருந்தும் ஏழாம் உருபு. உ-ம். விளவத்துக்கண், பலாவத்துக்கண் எனவரும். ள அ உ . ஞ ந வென் புள்ளிக் கின்னே சாரியை (&) இது, புள்ளியீற்றுள் ஞகாரவீறும் நகாரவீறும் முடியுமாறு கூறுதல் நுத லிற்று. இ-ள்:- ஞ ந என் புள்ளிக்கு இன்சாரியை-ஞ ந என்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வரும் சாரியை இன்சாரியை. உ-ம். உரிஞினை, உரிஞினொடு; பொருநினை, பொருகினொடு என ஒட்டுக. [ஏகாரம் அசை.] ள அங. சுட்டுமுதல் வகர மையு மெய்யும் கெட்ட யிறுதி பியத்திரி பின்தே, (ய) இது, வகரவீறு நான்கனுள்ளும் சுட்டுமுதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.