பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


(2)

(அ) தேசிய தலைநகர ஆட்சிநிலவரைக்காக சட்டமன்றப் பேரவை ஒன்று இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய பேரவையிலுள்ள பதவியிடங்கள், தேசிய தலைநகர ஆட்சிநிலவரைத் தேர்தல் தொகுதிகளிலிருந்து நேரடித் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களால் நிரப்பப்படுதல் வேண்டும்.
(ஆ)சட்டமன்றப் பேரவையிலுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கை, பட்டியலில் கண்ட சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கை, தேசிய தலைநகர ஆட்சிநிலவரையை ஆட்சிநிலவரைத் தேர்தல் தொகுதிகளாகப் பிரித்தல் (அத்தகைய பிரித்தலுக்கான அடிப்படை உள்ளடங்கும்) மற்றும் சட்டமன்றப் பேரவை செயற்படுவது தொடர்பான அனைத்து பிற பொருட்பாடுகள் ஆகியவை நாடாளுமன்றத்தினால் சட்டத்தின் வழி ஒழுங்குறுத்தப்படுதல் வேண்டும்.
(இ)324 முதல் 327 வரையிலான மற்றும் 329 ஆம் உறுப்புகளின் வகையங்கள், அவை, முறையே ஒரு மாநிலம், ஒரு மாநில சட்டமன்றப்பேரவை மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்பாகப் பொருந்துவது போன்றே, தேசிய தலைநகர ஆட்சிநிலவரை, தேசிய தலைநகர ஆட்சிநிலவரை சட்டமன்றப் பேரவை மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்பாகப் பொருந்தும்; மற்றும் 326 ஆம் மற்றும் 329 ஆம் உறுப்புகளில் “உரிய சட்டமன்றம்" என்பதற்கான சுட்டுகை எதுவும் நாடாளுமன்றத்துக்கான சுட்டுகை ஒன்றாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(3)

(அ)இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, சட்டமன்றப்பேரவை, தேசிய தலைநகர ஆட்சிநிலவரை முழுவதுக்கும் அல்லது அதன்பகுதி எதற்கும், மாநிலப் பட்டியலில் அல்லது ஒருங்கியல் பட்டியலில் எண்ணிடப்பட்ட பொருட்பாடுகளில் எதனையும் பொறுத்தவரையில், அத்தகைய பொருட்பாடு எதுவும், மாநிலப்பட்டியலின் 1, 2 மற்றும் 18 ஆம் பதிவுகளும், அந்தப் பட்டியலின் 64, 65 மற்றும் 66ஆம் பதிவுகள், மேற்சொன்ன 1, 2 மற்றும் 18 ஆம் பதிவுகள் பொறுத்த பொருட்பாடுகள் தவிர அவை தொடர்புள்ளதாக இருக்கும் அளவுக்கு அவையும், ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கு அத்தகைய பொருட்பாடுகள் பொருந்தும் அளவுக்கு, சட்டங்கள் இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
(ஆ) (அ)உட்கூறிலுள்ள எதுவும் ஒன்றியத்து ஆட்சி நிலவரை ஒன்றுக்கு அல்லது அதன் பகுதி எதற்குமான பொருட்பாடு எதனையும் பொறுத்து, சட்டங்கள் இயற்றுவதற்கு இந்த அரசமைப்பின்படி நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரங்களைத் திறக்குறைவு செய்வதில்லை.
(இ) எந்தப் பொருட்பாட்டினையும் பொறுத்து, சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்ட சட்டத்தின் வகையம் எதுவும், அந்தப் பொருட்பாட்டினைப் பொறுத்து, அச்சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு முன்போ பின்போ நிறைவேற்றப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றின் அல்லது சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாக அல்லாத பிற முந்தைய சட்டம் ஒன்றின் வகையம் எதற்கும் முரண்படுமாயின், அப்போது, அவ்விரு நேர்வுகளில் எதிலும், நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம், அல்லது நேர்வுக்கேற்ப, அத்தகைய முந்தைய சட்டம், மேலோங்கி நிற்கும் மற்றும் சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்ட சட்டமானது, அம்முரண்பாடு உள்ள அளவுக்கு இல்லாநிலையது ஆகும்:

வரம்புரையாக: சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்ட அத்தகைய சட்டம் எதுவும், குடியரசுத்தலைவரின் ஓர்வுக்காக வைக்கப்பட்டிருந்து, அவருடைய ஏற்பிசைவினைப் பெற்றிருக்குமாயின், அத்தகைய சட்டம், தேசிய தலைநகர ஆட்சி நிலவரையில் மேலோங்கி நிற்கும் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/117&oldid=1468852" இலிருந்து மீள்விக்கப்பட்டது