பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


(இ) பட்டியலில் கண்ட சாதியினரின் [1][*****] சமூக-பொருளியல் வளர்ச்சிக்கான திட்டமிடு செய்முறையில் பங்கேற்றல் மற்றும் அறிவுரை வழங்குதல்; மேலும், ஒன்றியத்திலும் மாநிலம் எதிலும் அவர்கள் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணித்தல்;
(ஈ) அந்தக் காப்பணைவுகளின் செயற்பாடு பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றும் ஆணையம் பொருத்தமெனக் கருதும் பிற் காலங்களிலும் குடியரசுத்தலைவரிடம் முன்னிடுதல்;
(உ) பட்டியலில் கண்ட சாதியினருக்கான [1][*****] காப்பணைவுகளையும் அவர்களுடைய பாதுகாப்பு, நல்வாழ்வு, சமூக-பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றிற்கான பிற நடவடிக்கைகளையும் திறம்படச் செயற்படுத்துவதற்காக, ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அத்தகைய அறிக்கைகளில் பரிந்துரைகள் செய்தல்; மற்றும்
(ஊ) பட்டியலில் கண்ட சாதியினருக்கான [1][*****] பாதுகாப்பு, நல்வாழ்வு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் ஒன்றின் வகையங்களுக்கு உட்பட்டு, குடியரசுத்தலைவர் வகுக்கும் விதிகளின்படி செயற்பணிகளை ஆற்றுதல்.

(6) அத்தகைய அறிக்கைகள் அனைத்துடனும், ஒன்றியம் தொடர்பான பரிந்துரைகளின்மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கையையும் அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, நாடாளுமன்ற ஈரவைகளின் முன்பும் வைக்குமாறு குடியரசுத்தலைவர் செய்விப்பார்.

(7) அத்தகைய அறிக்கை எதுவும் அல்லது அதன் பகுதி எதுவும், ஒரு மாநில அரசாங்கம் தொடர்புடைய பொருட்பாடு குறித்ததாயிருக்குமிடத்து, அத்தகைய அறிக்கையின் படியொன்று, மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும், அவர், அத்தகைய அறிக்கையுடன் மாநிலம் தொடர்பான பரிந்துரைகளின் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கக் கருதப்படும் நடவடிக்கையையும், அத்தகைய பரிந்துரைகளில் எவையும் ஏற்றுக்கொள்ளப்படாவிடின், அதற்கான காரணங்களையும் விளக்குகின்ற விவரக்குறிப்புடன் சேர்த்து, மாநிலச் சட்டமன்றத்தின் முன்பு வைக்குமாறு செய்விப்பார்.

(8) ஆணையமானது, 5ஆம் கூறின் (அ) உட்கூறில் சுட்டப்பட்ட பொருட்பாடு எதனையும் ஆய்ந்து காண்கையில் அல்லது (ஆ) உட்கூறில் சுட்டப்பட்ட முறையீடு எதனையும் விசாரணை செய்கையில், உரிமைவழக்கு ஒன்றை விசாரணை செய்யும் ஓர் உரிமையியல் நீதிமன்றம், குறிப்பாகப் பின்வரும் பொருட்பாடுகளைப் பொறுத்து கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் உடையது ஆகும்:

(அ) இந்தியாவின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நபர் எவரையும் அழைப்பாணை அனுப்பித் தன்முன் வரவழைத்தல் மற்றும் ஆணைமொழியின் மீது அவரை விசாரணை செய்தல்;
(ஆ) ஆவணம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு வேண்டுறுத்தல்;
(இ) ஆணையுறுதி ஆவணங்களைச் சான்றாக ஏற்றல்;
(ஈ) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் அரசுப் பதிவணம் அல்லது அதன்படி எதனையும் பெறுவதற்கு வேண்டுதலாணை இடுதல்;
ஆய்வு
(உ) சாட்சிகளை விசாரணை செய்வதற்காகவும் ஆவணங்களை செய்வதற்காகவும் பணிப்பாணைகளைப் பிறப்பித்தல்;


  1. 1.0 1.1 1.2 2003ஆம் ஆண்டு அரசமைப்புச் (எண்பத்து ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தால் விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/182&oldid=1468859" இலிருந்து மீள்விக்கப்பட்டது