பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


IV

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலும், இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையராலும் செய்யப்பட வேண்டிய ஆணைமொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக (அல்லது நீதிபதியாக) (அல்லது இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையராக) அமர்த்தப்பெற்றுள்ள நிலையில், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும், அச்சம், கண்ணோட்டம் இன்றியும், விருப்பு வெறுப்பு இன்றியும், முறையாகவும் அகத்தூய்மையுடனும் என் முழுவினைத்திறனும் அறிவுத்திறனும் தேர்வுத்திறனும் கொண்டு என் பதவிக்குற்ற கடமைகளை ஆற்றிவருவேன் என்றும் நான் அரசமைப்பு முறையையும் சட்டநெறிகளையும் நிலைபெறச் செய்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

V

மாநில அமைச்சருக்கான பதவி ஆணைமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும். • • • • • • மாநில அமைச்சர் என்னும் முறையில் என்னுடைய கடமைகளை அகத்தூய்மையுடனும் மனச்சான்றின்படியும் ஆற்றிவருவேன் என்றும் அரசமைப்புமுறைக்கும் சட்டநெறிக்கும் இணங்க அச்சம், கண்ணோட்டம் இன்றியும் விருப்பு வெறுப்பு இன்றியும், பல்திற மக்களுக்கும் தகுவன புரிவேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

VI

மாநில அமைச்சருக்கான மறைகாப்பு ஆணைமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான் • • • • • • மாநில அமைச்சர் என்னும் முறையில் என் ஓர்வுக்காக வைக்கப்படும் அல்லது எனக்குத் தெரியவரும் பொருட்பாடு எதனையும், அத்தகு அமைச்சர் என்னும் முறையில் என் கடமைகளை முறைப்படி ஆற்றுவதற்கு வேண்டியவாறன்றி, பிறவாறு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எந்த நபருக்கும் அல்லது நபர்களுக்கும் தெரிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

VII

மாநிலச் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளரால் செய்யப்பட வேண்டிய ஆணை மொழியின் அல்லது உறுதிமொழியின் சொன்முறை:-

"அ.ஆ. ஆகிய நான், சட்டமன்றப் பேரவையில் (அல்லது சட்டமன்ற மேலவையில்) ஒரு பதவியிடத்தை நிரப்புவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பெற்றுள்ள நிலையில் சட்டமுறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன் என்றும் கடவுளை முன்னிறுத்தி ஆணைமொழிகிறேன்."

உள்ளார்ந்து உறுதிமொழிகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/233&oldid=1467636" இலிருந்து மீள்விக்கப்பட்டது