பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


மேலும் வரம்புரையாக:

(அ) நீதிபதி ஒருவர் குடியரசுத்தலைவருக்குத் தம் கையொப்பமிட்டு எழுத்துவழித் தெரிவித்துத் தம் பதவியை விட்டு விலகிக்கொள்ளலாம்;
(ஆ)நீதிபதி ஒருவர், (4) ஆம் கூறில் வகைசெய்யப்பட்டுள்ள வழி முறையின்படி அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படலாம்.

(2அ) உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வயது என்ன என்பது, நாடாளுமன்றம் சட்டத்தினால் வகைசெய்யும் அதிகாரஅமைப்பினாலும், வகை செய்யும் வழிமுறையிலும் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(3) ஒருவர், இந்தியாவின் குடிமகனாக இருப்பதுடன்—

(அ) ஓர் உயர் நீதிமன்றத்திலோ, தொடர்ந்து இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அத்தகைய நீதிமன்றங்களிலோ குறைந்தது ஐந்தாண்டுகள் நீதிபதியாக இருந்துள்ளவராக; அல்லது
(ஆ) ஓர் உயர் நீதிமன்றத்திலோ, தொடர்ந்து இரண்டு அல்லது அவற்றிற்குமேற்பட்ட அத்தகைய நீதிமன்றங்களிலோ குறைந்தது பத்தாண்டுகள் வழக்குரைஞராக இருந்துள்ளவராக, அல்லது
(இ)குடியரசுத்தலைவரின் கருத்தின்படி தனிச்சிறப்பு வாய்ந்த சட்டவியலறிஞராக இருந்தாலன்றி, உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பெறுவதற்குத் தகுதிப்பாடு உடையவர் ஆகார்.

விளக்கம் I.—இந்தக் கூறில், “உயர்நீதிமன்றம்" என்பது, இந்திய ஆட்சிநிலவரையில் எப்பகுதியிலேனும் அதிகாரம் செலுத்திவருகிற அல்லது இந்த அரசமைப்பின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு எச்சமயத்திலேனும் அதிகாரம் செலுத்திவந்த ஓர் உயர் நீதிமன்றம் எனப் பொருள்படும்.

விளக்கம் II.—இந்தக் கூறினைப் பொறுத்தவரை, ஒருவர் வழக்குரைஞராக இருந்துள்ள காலஅளவைக் கணக்கிடுகையில், அவர் வழக்குரைஞரான பின்பு மாவட்ட நீதிபதி பதவிக்குக் கீழ்ப்படாத நீதித்துறைப் பதவியை வகித்து வந்திருக்கிற காலஅளவையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

(4) உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், அவருடைய நெறிதிறம்பிய நடத்தை அல்லது திறமையின்மை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென நாடாளுமன்ற அவை ஒவ்வொன்றிலும் அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையும், மேலும் அந்த அவை உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையும் கொண்ட உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு வேண்டுதலுரை அதே கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவரிடம் முன்னிடப்பட்டு அதன்மேல் குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்படும் ஆணையினால் அல்லாமல், அவருடைய பதவியிலிருந்து அகற்றப்படுதல் ஆகாது.

(5). (4) ஆம் கூறின்படி வேண்டுதலுரை ஒன்றை முன்னிடுவதற்கும் நீதிபதி ஒருவரின் நெறிதிறம்பிய நடத்தை அல்லது திறமையின்மையைக் குறித்துப் புலனாய்வு செய்வதற்கும் அதனை மெய்ப்பிப்பதற்குமான நெறிமுறையை நாடாளுமன்றம் சட்டத்தினால் ஒழுங்குறுத்தலாம்.

(6) உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்பெறும் ஒவ்வொருவரும், அவர்தம் பதவியை ஏற்பதற்கு முன்பு, குடியரசுத்தலைவர் அல்லது அவரால் அதன்பொருட்டு அமர்த்தப்பெறும் ஒருவரின் முன்னிலையில், மூன்றாம் இணைப்புப்பட்டியலில் அதற்கென உள்ள சொன்முறையில் ஓர் ஆணை மொழியை அல்லது உறுதிமொழியை ஏற்றுக் கையொப்பமிடுதல் வேண்டும்.

31-4—19a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/74&oldid=1467663" இலிருந்து மீள்விக்கப்பட்டது