22 நாடகமேடை நினைவுகள் சற்றேறக்குறைய முக்கால் மணி சாவகாசம் மொட்டு மாட்டு என்று உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஒன்பதே முக்கால் மணிக்கு, நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள் ளாக ஜனங்கள் கொட்டகையில் கிரம்பினர்கள். அது வரையில், ஏன் நாடகம் குறித்தபடி ஆரம்பிக்கவில்லை என்று ஆத்திரப் புட்டுக் கொண்டிருந்து என்னேப் பார்த்து என் தகப்பனர் புன் சிரிப்பாய் சிரித்துத் கொண்டிருந்தார். ஆன கதை எனக்குப் புத்தி வரும்படிச் செய்த மார்க்கங்களில் இது ஒன்ருகும். தான் கூறுவதற்குக் குறுக்காக நான் என் அறியாமையினுல் ஏதாவது ஆட்சேபனை செய்து பிடிவாதம் பிடித்தால், என்னிஷ்டப்படிப் போ விட்டு, ஆதல்ை படும் தஷ்டத்தை அனுபவிக்கச் செய்து, நான் புத்தியறியும் படிச் செய்வார். அன்றைத் தினம் நாடகம் 'ஸ் கிரீசாகசம்' என்பது; இது புராதனமான தமிழ் கதை யொன்றை ஒட்டியது. ஒன்பதே முக்கால் மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது என்று முன்பு கூறியதினல், நாடகமே ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். ஒன்பதே முக்காலுக்கு ாங்கத்தின் முன்பு விடப் பட்டிருக்க திசை தாக்கப்பட்டது உடனே நாடகம் ஆரம்பம் ஆகும் என்று சந்தோஷப்பட்டேன். ஆயினும் அச்சந்தோஷம் அதிக நாழிகை நிலைக்கவில்லை. முன் திரை துாக்கப்பட்ட வுடன், மேடையின் உள்ளே சங்கீதம் கேட்டது. பிறகு சுமார் கால்மணி சாவகாசம், விநாயகர் துதி, கலைவாணிததி, கம்பெனி யாரின் இஷ்டதேவதைகள் துதி முதலியன பாடப்பட்டன. நாடகக் கதையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்த எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கடைசியில் சுமார் பத்துமணிக்கு கோவிந்த சாமிராவ் சங்கத்தின் மீது வந்தார். இப்பொழுதா வது நாடகமானது ஆரம்பிக்கப் பட்டதே என்று குது ஹலம் கொண்ட என் மனமானது சடுதியில் தணிவை யடைந்தது ! அவர் கையில் தாளங்கள் வைத்துக் கொண்டு ராமமஹ' என்கிற பாட்டைப் பாட ஆரம்பித்தார். அப்பாட்டு முடிந்த வுடன் ஒரு வேஷதாரி, அலங்கோலமாய் ஆடை அணிந்து தலையில் வேப்பிலையைக் கட்டிக்கோண்டு, காலில் சலங்கை அணிந்தவனுய், ஆடிக்கொண்டு சங்கத்தில் பிரவேசித்தான். இவன் யார் என்று என் தந்தையை நான் கேட்க, இவன் கான் விது ஷக வேஷதாரி என்று அவர் எனக்குத் தெரிவித்தார். பிறகு அவனுக்கும் சூத்திரதானுக வந்த கோவிந்தசாமி ராவுக் கும் தர்க்கம நடந்தது. அதில் கோவிந்தசாமி ராவ் சுமார் கால் மணி சாவகாசம், நாடகக்கதை இன்னதென்று சவிஸ்தா மாகத்
பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/27
Appearance