16 உத்தரவால் நிறுத்தப்பட்டதென்று பெர்கூசன் கூறு கிருரர். தசண்டவுலு :-ரேபள்னி தாலூகா, குண்டுர்-ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி லிங்கோக்பவ ஸ்வாமி, - - தஞ்சாவூர் -மேற்படி ஜில்லா, சென்னை ராஜதானி ரெயில் ஸ்டேஷன், சிவாலயம், ராஜராஜேஸ்வரம் என்பது இதன் பழைய பெயராகும். கஞ்சாசுரனைக்கொன்ற ஸ்தல மாதலால் தஞ்சையெனப் பெயர் பெற்றதென்பர். ராஜ ராஜல்ை கோயில் கட்டப்பட்டபடியால் ராஜ ராஸ்ேவரம் என்ப் பெயர்பெற்றது. (தேவாரப் பதிகங்களில் வழங்கப் பட்ட தஞ்சை என்பது இதன்று, அது வேறு சிவஸ்தல மாகும்). தேவாரக்காலத்தின் பிறகு இக்கோயில் கட்டப் பட்டபடியால் இதற்கு மூவர் பாடல் கிடையாது. திரு விசைப்பா மாத்திரம் உண்டு. அதில் இவ்வூர் தஞ்சை ராஜ ராஜேஸ்வரம் என வழங்கப்பட்டிருக்கிறது. .ே க யி ல் 1003-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு 1009-ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலுக்கு பிரஹதீஸ்வரர் கோயில் என்றும் பெயர். ஸ்வாமி பிரஹதீஸ்வரர், (பெரிய ஈஸ்வரர்) பெரிய உடையார் எனவும் வழங்கப்பட்டிருக்கிறது. பெயரிற் கிசையலிங்கம் மிகவும் உன்னதமானது. அபிஷேக அலங்காரம் செய்வதற்கு அருகில் ஏணி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கேவி பிரஹன் யைகி, சிவங்கி (சிவகங்கை) தீர்த்தம் (ஜலம் சிவந்த கிற முடையது) ராஜராஜல்ை வெட்டப்பட்டதென்பர். கோயி வின் விமானம் மிகவும் பிரசித்தமானது மிகவும் உன்னத மானது. 216 அடி உயரம் , தட்சினமேரு எனும் பெயர் பெற்றது, உத்தம விமானம் என்றும் பெயர் ; மிகவும் அழகியது, சிற்பியின் சாதுர்யத்தால் இதன் கிழலைக் காண்பகரிதாம். இதன் அடிவாரம் 96 அடி சதுரம். விமானத்தின் உச்சியிலிருக்கும் பிரம்மாந்திரம் ஒரே கல்லாலாயது, 80 டன் பாரமுள்ளதென்பர். இச்சதுரக் கல்லின் நான்கு முனைகளிலும் நான்கு நந்திகள் இருக் கின்றன, இவை ஒவ்வொன்றும் 6 அடி கிகளம் 5க் அடி அகலம். பிரம்மாந்திரத்தைச் சுற்றி ஒரு குதிரை வண்டி