பக்கம்:Tamil varalaru.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியங் கூறும் நூல் வகைமை 309 இச்சூத்திரத்தான் பரிபாடல் காமப்பொருளைக் கண்ணிய கிலேமைத்தாக வருமென்பதே இவர்க்குடன்பாடாதல் காண்க. இதல்ை, கடவுள் வாழ்த்துக் கூறிய கடைச்சங்க காலப் பரி பாடற் செய்யுட்டொகை நாலுக்கு இவர் இலக்கணம் முந்திய தாதல் ஒருதலையாம் என்க. இவர் இலக்கணத்தோடு கடைச் சங்க காலத்துப் பரிபாடல் பொருந்தாமை கண்ட பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் காமங் கண்ணிய ' என் புழிக் கண்ணிய என்பதற்ை கடவுள் வாழ்த்து வருமென்றும் அது காமங் கண் ளிையே வருமென்றுங் கொண்டார். காமங் கண்ணுத கடவுள் வாழ்த்தும் இப்பரிபாடலுட் காண்டலால் இவர் கருத்தொடு பரி பாடற் பகுதி சில இயையாமை கண்டுகொள்க. காம வகையு ளாதலால் மலை விளையாட்டு, புனல் விளையாட்டு, வேறே கூற வேண்டாவென்க. இளம்பூரணர் இச்சூத்திர வுரையில் அறத்தி லும் பொருளினும் பரிபாடல் வாராதென்று கொண்டு, வாழ்த்தியல் வகையே காற்பாற்கு முரித்தே ' (தொல். செய்யுளி. 109) எனச் சிறப்பு வகை ஒதினமையான் நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்ருதல் கடவுள் வாழ்த்தாயும் வரப்பெறும் என்ருர். இளம்பூரணர் இப்பரிபாடற்கு எடுத்துக் காட்டிய பழஞ் சூத்திரங்கள் பலவற்றினும் கடவுள் வாழ்த்துக் கூறப் படாமையும் அவர் காட்டிய, அதுதான் மலேயே யாறே யூரே யவற்றி னிலைபெறு மரபி னிங்கா தாகும் ' , என்னுஞ் சூத்திரம் காம விளையாட்டிற்கு இடமே கூறுவதும் அவர் உரை கோக்கிக் கண்டுகொள்க. உரை காரர்கள் கடவுள் வாழ்த்தைக் கடைச் சங்கப் பரிபாடலுட் கண்டு அதற்கிலக்கணம் தொல்காப்பியத்துள் அமைத்தற்குப் பல்வகையானு முயன்று இடர்ப்படுதல் இதல்ை உணரலாகும். இவ்வாசிரியர்க்கு இவ் வுரைகாரர் கொள்கை கருத்தாயின் அதற்கேற்றபடி கடவுள் வாழ்த்து என்ற தொடரையும் இப்பரிபாடல் இலக்கணச் சூத்தி ரங்களிற் பெய்து வைப்பது இயலாததொன்று அன்று என்க. இப்போதுள்ள பரிபாடலுள், காமங் கண்ணுது கடவுள் வாழ்த் தாயே வந்தன. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/317&oldid=731488" இலிருந்து மீள்விக்கப்பட்டது