பஞ்ச தந்திரக் கதைகள்/அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

விக்கிமூலம் இலிருந்து

7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

ஒரு பொய்கையில் இரண்டு மீன்களும் ஒரு தவளையும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தன. ஒரு நாள் வலைஞன் ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தவளை வந்து, 'நாளை வலைஞன் வந்து மீன்களைப் பிடிப்பதாகச் சொல்கிறான். நரம் இப்பொழுதே வேறொரு பொய்கைக்குப் போய் விடுவது நல்லது’ என்று கூறியது,

அதற்கு ஒரு மீன் 'நான் மிக விரைவாகச் செல்லக் கூடியவன். ஆகையால் இப்பொழுதே வேறிடம் போக வேண்டியதில்லை’ என்று கூறியது. மற்றொரு மீன். 'ஒருவன் தான் இருக்குமிடத்தை

ப-14 விட்டுப் போவதே தவறு? என்று கூறியது.

தவளையோ 'நான் போகிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டது.

மறுநாள் வலைஞன் வந்து மீன்களை யெல்லாம் பிடித்துக் கொண்டு போனான், செத்துப் பிணமாகிப் போன அந்த இரு மீன்களையும் பார்த்து. தவளை தன் மனைவியிடம், 'என்ன அறிவு சொல்லியும் கேட்காததால் இவற்றிற்கு வந்த முடிவைப் பார்’ என்று சொல்லி மிகவும் வருந்தியது.