பஞ்ச தந்திரக் கதைகள்/பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை

விக்கிமூலம் இலிருந்து

8. பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை

ஒர் ஊரில் ஒரு கழுதை இருந்தது. அது ஒரு நரியோடு சேர்ந்து பயிர் மேய்வது வழக்கம். ஒருநாள் அது விலாப் புடைகள் வீங்க மேய்ந்து ஏப்பம்

விட்டுக் கொண்டிருந்தது. அப்போது இரவு நேரம், நிலாக் காலம்; பொழுது போவதற்கு நான் இசை பாடுகிறேன்; நீ கேள்’ என்று நரியிடம் கூறியது.

‘உன் குரல் கேட்டால் பயிர்க்காரன் வந்து கொன்று விடுவான்!'என்று நரி கூறியது.

அதன் சொல்லைக் கேளாமல் கழுதை தன் பாழான குரலெடுத்துப் பாடியது. உழவர்கள் வந்து அதை உடம்பு நொறுங்கும்படியாக அடித்து விரட்டினார்கள்.

நரி தூரத்தில் ஓடிப்போய் நின்று கொண்டு 'கழுதை மாமா, என் பேச்சைக் கேட்காததனால் தானே அடிபட்டாய்? ஏன் இந்த இறுமாப்பு!' என்று ஏசி விட்டுச் சென்றது.