பெருங்கதை/1 57 படைவீடு

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

1 57 படைவீடு

படையாளர் செயல்[தொகு]

பொருபடை யிளையர் புகன்றனர் சூழ்ந்து
செருவரு செம்மலைச் செல்ல லோம்பிக்
கூப்பிய கையினர் காப்பொடு புரிய
வண்டலர் படலை வயந்தக குமரனும்
தண்டத் தலைவனுந் தலைப்பெய் தீண்டிக் 5
கனிபடு கிளவியைக் கையகப் படுத்துத்
துனிவொடு போந்த தோழனைத் துன்னி
இழுக்க வியல்பி னொழுக்க மோம்பி

உதயணன் செயல்[தொகு]

வஞ்சமில் பெரும்புகழ் வத்தவ ரிறைவனும்
நெஞ்ச மகிழ்ந்து நீத்துமிக வுடைய 10
துனபப் பெருங்கடற் றுறைக்கட் பொருந்திய
இனபப் பெரும்புணை யாயினி ரெமக்கென்
அன்புடை யருண்மொழி நன்புபல பயிற்றி
ஆர்வத் தோழரை யார்த லாற்றான்
வீரத் தானை வேந்தன் விரும்பி 15
நறைமலர்ச் சோலை யிறைகொண் டிருப்பப்

இடபகன் ஏவலாளர் உதயணனுக்குப் படைவீடு அமைத்தல்[தொகு]

பெருமூ தாளரும் பெருங்கிளைச் சுற்றமும்
திருமா தேவிக்குத் தெருவன ரமைத்த
வண்ண மகளிரொடு வைய முந்துறீஇ
வந்தொருங் கீண்டிய பின்றைச் சயந்தி 20
நாடுவண் டரற்றுங் கோடுயர் சாரல்
இறைமகன் விட்டிட வுறையுண் முறைமையின்
மறுகு முற்றமு மாண்பட வகுத்துத்
தறிமிசைக் கொளீஇய செறிநூன் மாடமொடு
நிரைநிரை கொண்ட நுரைபுரை திருநகர் 25
பசும்பொற் புளகம் விசும்புபூத் ததுபோல்
பரந்த பாடி நிரந்தவை தோன்றப்

வாசவதத்தைக்குரிய இடங்களும் பண்டங்களும் அமைத்தல்[தொகு]

பேணார்க் கடந்த பிரச்சோத னன்மகள்
பூணா ராகத்துப் பொங்கிள வனமுலை
வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தைக்குப் 30
பள்ளி மாடமும் பாற்பட வமைத்துப்
பாவையு முற்றிலும் பூவையுங் குழலும்
பைம்பொற் கவறும் பளிக்குமணி நாயும்
சந்தனப் பலகையுஞ் சந்தப் பேழையும்
சாந்தரை யம்மியுந் தேங்கட் காழகிற் 35
பகைத்துளை யகலுஞ் சிகைத்தொழிற் சிக்கமும்
கோதைச் செப்புங் கொடிக்கொட் டகரமும்
கிளியு மயிலுந் தெளிமொழிப் பூவையுஞ்
செம்பொற் கரண்டமும்…..
மணிக்கலப் பேழையு மணிக்கண் ணாடியும் 40
மணிதிகழ் விளக்கு மயிர்வினைத் தவிசும்
இருக்கைக் கட்டிலு மடைப்பைத் தானமும்
செங்கோ டிகமும் வெண்பாற் றவிசும்
முட்டிணை வட்டும் பட்டிணை யமளியும்
ஆல வட்டமு மணிச்சாந் தாற்றியும் 45
மாலைப் பந்து மேனைய பிறவும்
ஏந்திய கையர் மாந்தளிர் மேனி
மடத்தகை மகளிர் படைப்பொலிந் தியல

உதயணனுக்குரியன அமைத்தல்[தொகு]

அரைசியன் முறைமையி னண்ணற் கமைந்த
விரைபரி மாவும் வேழமுந் தேரும் 50
தெள்ளொளித் திரள்காற் றிகழ்பொன் னல்கிய
வெள்ளிப் போர்வை யுள்ளொளிப்படலத்து
வள்ளிக் கைவினை வனப்பதுமை கட்டிலும்
விளங்குமணி முகட்டின் றுளங்குகதிர் நித்திலக்
கோவைத் தரளங் கொட்டையொடு துயல்வரும் 55
கொற்றக் குடையும் வெற்றி வேலும்
கொடியுங் கவரியு மிடியுறழ் முரசும்
சங்க படவமுங் கம்பல விதானமும்
அங்காந் தியன்ற வழலுமிழ் பேழ்வாய்ச்
சிங்காச னமும் பொங்குபூந் தவிசும் 60
பள்ளிப் பலவகைப் படுப்பவும் பிறவும்
வள்ளிப் போர்வையும் வகைவகை யமைத்துத்

சிலதர் முதலியோர் செயல்[தொகு]

தெளியப் படூஉ முளீவில் செய்தொழிற்
சிலதரு மியவருஞ் சிந்து தேசப்
பலவகை மரபிற் பாடை மாக்களும் 65
ஆய்நல மகளிர் வேய்நலம் பழித்த
தோடர வந்த வாய்தொழி லாளரோ
டென்னோர் பிறருந் துன்னினர் சுற்ற
ஏவற் கமைந்த காவற் றொழிலொடு
கைக்கோ லிளையருங் கணக்குவினை யாளரும் 70
மெய்க்கோண் மள்ளரு மீளி மாந்தரும்
புற்றகத் தொடுங்கி முற்றிய காலை
ஈரம் பார்க்கு மீயற் கணம்போல்
நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை
மீட்டிடம் பெற்றுக் கூட்டிடங் கூடிக் 75
கடிதுசெ லியற்கைப் பிடிமிசை யிருந்த
வருத்த மறிந்து மருத்துவர் வகுத்த
அரும்பெற லடிசி லவிழ்பதங் கொள்ளும்
பெரும்பக னாழிகை பிழையா தளக்குநர்
செவ்வி யறிந்து கவ்விதின் மொழிய 80

உதயணன் நீராடி உண்ணல்[தொகு]

நள்ளிரு ணடைப்பிடி யூர்ந்த நலிவினும்
பள்ளி கொள்ளாப் பரிவிடை மெலிவினும்
கவர்கணை வேடரொ டமர்வினை வழியினும்
பலபொழு துண்ணாப் பசியினும் வருந்திய
செல்வக் காளை வல்லவன் வகுத்த 85
வாச வெண்ணெய் பூசிப் புனைந்த
காப்புடை நறுநீர் காதலி னாடி
யாப்புடைத் தோழரொ டடிசி லயில

வாசவதத்தை நீராடல் முதலியன[தொகு]

நிறைத்துவர் நறுநீர் சிறப்பொ டாடிய
தாமரை முகத்தியைத் தமனியப் பாவையிற் 90
காமர் கற்சுனைத் தானமுத னிறீஇத்
தன்ன மகவயிற் றவாஅத் தாதைக்கு
முன்ன ரெழுந்த முழுக்கதம் போலப்
புறவயிற் பொம்மென வெம்பி யகவயின்
தணமை யடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர் 95
வரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்
சொரிவன ராட்டித் தூசுவிரித் துடீஇக்
கோங்கின் றட்டமுங் குரவின் பாவையும்
வாங்கிக் கொண்டு வாருபு முடித்து
மணிமா ராட்டத் தணிபெற வழுத்திக் 100
காவலன் மகளைக் கைதொழு தேத்தி
ஆய்பத வடிசின் மேயதை யூட்டி
அவிழ்மலர்ப் படலைத் தந்தை யகவயின்
நிகழ்வதை நிகழ்த்திப் புகழ்வரும் பொலிவொடு
பரிசனஞ் சூழ்ந்து பரிவுநன் கோம்ப 105
அன்றை யப்பக லசைஇ யொன்றிய
துன்பப் பெருங்கட னீந்தி யின்பத்
தேம நெடுங்கரை யெய்தி யாமத்து
மதியம் பெற்ற வானகம் போலப்
பொதியவிழ் பூந்தார்ப் புரவல,ற் றழீஇச் 110
சுரமுத னிவந்த மரமுத றோறும்
பால்வெண் கடலின் பனித்திரை யன்ன
நூல்வெண் மாடங் கோலொடு கொளீஇ
மொய்த்த மாக்கட் டாகியெத் திசையும்
மத்த யானை முழங்கு மாநகர் 115
உத்தர குருவி னொளியொத் தன்றால்
வித்தக வீரன் விறற்படை வீடென்.

1 57 படைவீடு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/1_57_படைவீடு&oldid=482580" இலிருந்து மீள்விக்கப்பட்டது